என் மலர்
நீங்கள் தேடியது "Akhilesh Yadav"
- பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
- ஏனென்றால் இந்தத் தேர்தல் சதி இப்போது அதிகமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியின் மிகப்பெரிய தோல்விக்கு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மற்றும் பாஜக தான் காரணம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகாரில் எஸ்.ஐ.ஆர் ஒரு பெரிய தேர்தல் சதி என்றும், பாஜக அதைப் பயன்படுத்தி ஒரு பெரிய அரசியல் மோசடியைச் செய்ததாகவும் அகிலேஷ் குற்றம் சாட்டினார்.
மேலும், பீகாரில் செயல்படுத்தப்பட்ட SIR விளையாட்டை மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் தொடங்கி வேறு எந்த மாநிலத்திற்கும் கொண்டு வர முடியாது.
ஏனென்றால் இந்தத் தேர்தல் சதி இப்போது அதிகமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல், அவர்கள் இந்த விளையாட்டை மீண்டும் விளையாட நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
CCTV போல நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பாஜகவின் நோக்கங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும். பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு மோசடி" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- பீகார் மாநில தேர்தல் மத்தியில் பாஜக தலைமையிலான அரசை நிலைகுலையச் செய்யும்.
- மத்திய அரசு நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பூரினியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-
பீகார் மாநில தேர்தல் மத்தியில் பாஜக தலைமையிலான அரசை நிலைகுலையச் செய்யும். மத்திய அரசு நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை. பீகார் மக்கள், மாநிலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்துபவர்கள் அல்ல. ஒட்டுமொத்த நாட்டையும் மேம்படுத்துவார்கள். உ.பி. மக்கள் அவாத்தில் பாஜகவை தோற்கடித்தனர். அதேபோல் பீகார் மக்கள் மகாத்தில் அவர்களை தோற்கடிப்பார்கள்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக-வுக்கு மிகவும் குறைவான இடங்களே கிடைத்தன. இதனால் பாஜக-வால் தனிப்பெரும்பான்மை றெ முடியாமல் போனது. 80 தொகுதிகளில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சமாஜ்வாடி 37 இடங்களில் வெற்றி பெற்றது.
- சேறு, மழை நீரால் சாலையில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத அவலம்.
- மாட்டு வண்டியில் கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் சேறு, தண்ணீர் தேங்கிய சாலையில் மாட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்படும் வீடியோவை வெளியிட்டு, அகிலேஷ் யாதவ் ஆளும் பா.ஜ.க. அரசின் வளர்ச்சி இதுதானா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத அளவிற்கு சாலை மோசமாக இருந்ததால், மாட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வீடியோ வெளியிட்டு எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பாஜக-வின் தவறான ஆட்சியின் கீழ், உத்தர பிரதேசத்தில் மாட்டு வண்டி, ஆம்புலன்ஸ் ஆக மாறிவிட்டது. டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மாட்டு வண்டிகளில் இயங்குமா?. டெல்லி தொலைநோக்கி அல்லது தேவைப்பட்டால் டிரோன்கள் மூலம் அடுத்த முறை முதல்வர் களத்திற்கு செல்லும்போது, சாலைகள் மற்றும் ஆம்புலன்ஸ் நிலைகள் என்ன? என்பதை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள பர்சத்வா தேரா காயு காட் சானி கிராமத்தில், கர்ப்பிணி பெண்ணை அவரது 60 வயது மாமனார் மாட்டு வண்டியில் அழைத்துச் சென்றுள்ளார். சாலை சரி செய்யப்படாததால் சேறு மற்றும் மழைநீர் தேங்கியதால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
3 மணி நேரத்திற்கு பின் அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு கர்ப்பிணி பெண்ணை அழைத்துச் சென்றனர். குழந்தை பிறக்க இன்னும் 2 நாட்கள் ஆகலாம் என, முதலுதவி அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த கிராமத்தில் 500 பேர் வசித்து வருகிறார்கள். ஒவ்வொரு பருவமழையின்போது, இதுபோன்ற கஷ்டத்தை அனுபவித்து வருவதாக தெரிவித்தனர்.
- தொடர்ந்து தனது கருத்துக்களை பேஸ்புக் தளத்தில் அவர் முன்வைத்து வந்தார்.
- எதிர்க்கட்சிகளின் குரலை தடுக்கும் பாஜகவின் சதி என சமாஜ்வாதி குற்றம்சாட்டியது.
உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி கட்சி உள்ளது. இதன் தலைவரும் மக்களவை எம்.பியுமான அகிலேஷ் யாதவ் உடைய பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது. நேற்று மாலை முதல் அவரது பேஸ்புக் செயல்பாடு துண்டிக்கபட்டது. இதில் அவருக்கு 85 லட்சம் பின்தொடர்பவர்கள் இருந்தனர்.
தொடர்ந்து தனது கருத்துக்களை பேஸ்புக் தளத்தில் அவர் முன்வைத்து வந்த நிலையில் இந்த முடக்கம் எதிர்க்கட்சிகளின் குரலை தடுக்கும் பாஜகவின் சதி என சமாஜ்வாதி குற்றம்சாட்டியது.
இந்நிலையில் இதில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் அகிலேஷ் வெளியிட்ட பதிவு காரணமாக பேஸ்புக் நிறுவனம் இந்த நடவைடிக்கையை எடுத்ததாகவும் மத்திய ரெயில்வே மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே தற்போது அகிலேஷின் பேஸ்புக் கணக்கு மீட்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டை தடுக்க வேண்டும்.
- தடுக்காவிட்டால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் என்றார் அகிலேஷ்.
லக்னோ:
பாராளுமன்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் ஆளும் பா.ஜ.க. அரசு வாக்குத் திருட்டில் ஈடுபட்டே தொடர்ந்து பல தேர்தல்களில் வெற்றி பெற்றது என காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நம் நாட்டில் நடக்கும் பல தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர், அயோத்யா உள்ளிட்ட பல இடங்களில் நடந்த தேர்தல்களில், வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்பட்டனர்.
இன்று சமூக வலைதளங்களின் காலம். இளைஞர்கள் அவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். நம் அண்டை நாடுகளில் அரசுக்கு எதிரான புரட்சிகளை நம்மால் பார்க்க முடிகிறது.
வாக்குத் திருட்டை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தேர்தல் ஆணையத்தின் தலையாய கடமை.
வாக்குத் திருட்டை தடுக்காவிட்டால், இன்று நம் அண்டை நாடுகளில் அரங்கேறும் அவல நிலை நம் நாட்டிலும் நடக்க வாய்ப்புள்ளது.
அங்கு அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குத் திருட்டை தடுக்காவிட்டால், நம் நாட்டிலும் மக்கள் வீதிகளில் இறங்கும் நிலை வந்துவிடும் என தெரிவித்தார்.
- பீகாரில் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்டுள்ளார்.
- சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், இன்று ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை பேரணியில் உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று பங்கேற்றார்.
இந்த பேரணியில் பேசிய அகிலேஷ் யாதவ், "வாக்காளர் உரிமை பேரணியில்சேர நான் இங்கு வந்துள்ளேன். யாத்திரையை ஆதரித்ததற்காக பீகார் மக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். பீகாரின் குரல் நாடு முழுவதும் ஒலிக்கிறது. இந்த முறை பாஜக பீகாரிலிருந்து வெளியேறப் போகிறது" என்று தெரிவித்தார்.
- ஸ்ரீவத்சவாவை நோக்கி விரைந்த சவுத்ரியை, மற்ற எம்.எல்.ஏ.க்கள் தடுத்து நிறுத்தினர்.
- இதுபோல் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் தலைவர்களை ஆதரிக்கிறீர்களா என்று அகிலேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரின் போது பாஜக எம்எல்ஏக்கள் சண்டையிட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.
எம்எல்ஏ ராஜேஷ் சவுத்ரிக்கும், சவுரப் ஸ்ரீவஸ்தவாவுக்கும் இடையே சண்டை நடந்தது. விஷன் 2047 திட்டம் தொடர்பான விவாதத்தின் போது இந்த மோதல் நடந்தது.
வாக்குவாதத்தின் போது, ஸ்ரீவத்சவாவை நோக்கி விரைந்த சவுத்ரியை, மற்ற எம்.எல்.ஏ.க்கள் தடுத்து நிறுத்தினர்.
சட்டமன்றத்தில் பாஜக சார்பில் யார் பேசுவது என்ற சர்ச்சையால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.
இருவரும் வாக்குவாதம் செய்யும் வீடியோவை அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் இல் வெளியிட்டார். இதுபோல் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் தலைவர்களை ஆதரிக்கிறீர்களா என்று அகிலேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
- தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்
- தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு தடுக்கப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.
பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி. நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.
பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், போலீசார் தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தியதால் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போலீஸ் தடுப்பு வேலியைத் தாண்டி குதித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அகிலேஷ் யாதவை போலீசார் கைது செய்தனர்.
- உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ச்சியான ஞானம் கிடைக்க வாழ்த்துகிறேன்.
- பிற்போக்குத்தனமான சித்தாந்தங்களுக்கு எதிராக எப்போதும் வலுவாக நிற்க வாழ்த்துகிறேன்.
இன்று பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இருவருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
வெங்கையா நாயுடு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ச்சியான ஞானம் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில்,
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
வி.பி.சிங் அவர்களின் மண்ணில் சமூகநீதியின் ஜோதியை முன்னெடுத்துச் சென்று, முற்போக்கான அரசியலுக்கு வழிவகுத்து, உங்கள் தந்தை முலாயம் சிங் அவர்களின் பெருமைமிக்க மரபில், பிற்போக்குத்தனமான சித்தாந்தங்களுக்கு எதிராக எப்போதும் வலுவாக நிற்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- 47,573 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். மற்றும் அடிக்கல் நாட்டுகிறார்.
- பெரும்பாலான திட்டங்களில் பணிகள் சமாஜ்வாடி கட்சியால் முடிக்கப்பட்டவை.
பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் செல்கிறார். அப்போது 47,573 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். மற்றும் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், நாங்கள் செய்து முடித்த திட்டங்களை பாஜக திறந்து வைப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக ஆட்சிக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆனால் இப்போது அவர்கள் சமாஜ்வாடி கட்சி செய்த பணிகளைத் தொடங்கி வைக்கிறார்கள். பங்கி தெர்மல் விரிவாக்கம் திட்டம், நெய்வேலி லிக்நைட் மின்நிலையம், கான்பூர் மெட்ரோ போன்றவை சமாஜ்வாடி கட்சியால் செய்து முடிக்கப்பட்டது.
- குப்பைகளை அகற்றும் ஒப்பந்தங்களிலிருந்து கூட கமிஷன் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர்.
- இதுபோன்ற கருத்துக்களைக் கேட்க உத்தரபிரதேசம் முழுவதும் பாக்கியம் பெற்றுள்ளது
"குப்பையில் இருந்து தங்கம் உருவாக்கும் இயந்திரத்தை மீரட்டில் தயாரித்து வருகிறோம். மிக விரைவில் அது பயன்பாட்டுக்கு வந்துவிடும்" என்று உத்தரபிரதேச பால்வளத்துறை அமைச்சர் தரம்பால் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பாஜக அமைச்சர் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். .
அந்த எக்ஸ் பதிவில், "குப்பைகளை தங்கமாக மாற்றும் இயந்திரங்களைப் பற்றி பேசுவதற்கு முன்பு, கன்னோஜில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள ஒரு பால் ஆலையை செயல்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தரம்பால் சிங் கவனம் செலுத்த வேண்டும்.
ஒருவேளை பாஜகவின் ஊழல் தற்போது மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அவர்கள் இப்போது குப்பைகளை அகற்றும் ஒப்பந்தங்களிலிருந்து கூட கமிஷன் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர் .இதுபோன்ற கருத்துக்களைக் கேட்க உத்தரபிரதேசம் முழுவதும் பாக்கியம் பெற்றுள்ளது" என்று கிண்டலாக தெரிவித்தார்.
- சமீபத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரூ.19 லட்சம் கோடியை இழந்தனர்.
- எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது என அகிலேஷ் தெரிவித்தார்.
லக்னோ:
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
முத்ரா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவடைந்த நிலையில், பா.ஜ.க. அரசாங்கத்தின் கீழ் ரூ.33 லட்சம் கோடி மதிப்புள்ள மோசடிகள் மற்றும் முறைகேடுகளை முரண்பாடான தரவுகள் அம்பலப்படுத்தியுள்ளன.
சமீபத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரூ.19 லட்சம் கோடியை இழந்தனர். எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 அதிகரித்துள்ளது.
நாட்டின் மிக முக்கியமான பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
கான்பூரில் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் வதந்திகளைப் பரப்புவதன் மூலம் அமைதியைக் குலைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.






