search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "akhilesh yadav"

    • ஹோலி பல வண்ணங்களால் ஆன பண்டிகை. ஆனால் நம் நாட்டில் சிலருக்கு சில நிறங்கள் பிடிக்கவில்லை
    • உத்தரபிரதேசத்தில் வினாத்தாள் கசிய விடாமல் அரசு தேர்வு நடப்பது இல்லை

    பாஜக இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால், இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் அவர்களுக்கு திருமணம் கூட நடக்காது" என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்று தனது சொந்த கிராமமான சைஃபாயில் தனது கட்சியினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

    அப்போது பேசிய அவர், "ஹோலி பண்டிகை ஒருவரையொருவர் கொண்டாடுவதற்கும் அரவணைப்பதற்கும் வாய்ப்பளிக்கிறது. அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று நீங்களும் நானும் இந்த சமயத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

    ஹோலி பல வண்ணங்களால் ஆன பண்டிகை. ஆனால் நம் நாட்டில் சிலருக்கு சில நிறங்கள் பிடிக்கவில்லை, அவர்களுக்கு ஒரே ஒரு நிறம் மட்டும் தான் பிடிக்கும். ஆனால், இந்தியா பலதரப்பட்ட மக்களின் பல்வேறு சித்தாந்தங்களையும், மாறுபட்ட சிந்தனைகளையும் கொண்டிருக்கும் ஒரு ஜனநாயக நாடு என்பதே உண்மை.

    உத்தரபிரதேசத்தில் வினாத்தாள் கசிய விடாமல் அரசு தேர்வு நடப்பது இல்லை. வேலை கொடுக்க வேண்டும் என்றால், இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். ஆனால் உயர்சாதியினருக்கு மட்டுமே அரசு வேலை கொடுக்க விரும்பும் பாஜக அரசு, வேண்டுமென்றே வினாத்தாள்களை கசியவிடுகிறது.

    கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இதுவரை ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு எப்படி வளர்ந்த நாடாக மாற முடியும்?

    தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த கட்சிக்கு அதிக பணம் சென்றது என்பது அனைவருக்கும் தெரியும். நன்கொடைகள் என்பது தானாக முன்வந்து அல்லது மக்களுக்கு உதவுவதற்காக வழங்கப்படுகின்றன. ஆனால் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவற்றின் மூலம் அழுத்தம் கொடுத்து பணத்தை பெறுவது என்பது வழிப்பறியாகவே கருதப்படும். தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக செய்தது வழிப்பறி தான்.

    பாஜகவுக்கு யாராவது பணம் கொடுத்தால் அது நன்கொடை, வேறு யாருக்காவது கொடுத்தால் அது கருப்பு பணம் என்று மோடி, அமித் ஷா நினைக்கின்றனர். வரும் தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும்" என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

    • மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
    • இதனையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன

    மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் தொடர்ந்து நாட்டிற்கு எதிரான எதிர்மறையான எண்ணங்களை மக்களிடம் பரப்பி தவறாக வழிநடத்தி வருவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் "இந்திய வாக்காளர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். தங்களை யார் சரியாக வழி நடத்துகிறார்கள்? தவறாக வழி நடத்துகிறார்கள்? என்று அவர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்" என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    • 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் லட்சக்கணக்கான குடிமக்கள் ஏன் இந்திய நாட்டின் குடியுரிமையை துறந்தனர்
    • நாடாளுமன்ற தேர்தலில் இவர்களின் பொய்களுக்கெல்லாம் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்

    குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு இன்று அமல்படுத்தியுள்ளதற்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் லட்சக்கணக்கான குடிமக்கள் ஏன் இந்திய நாட்டின் குடியுரிமையை துறந்தனர் என்பதையும் பாஜக அரசு விளக்க வேண்டும்.

    நாட்டின் குடிமக்கள் வாழ்வாதாரத்திற்காக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூழ்நிலையில், குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் என்ன நடக்க போகிறது?

    பாஜகவின் தேர்தல் நேர திசைதிருப்பும் வேலைகளையெல்லாம் மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர்களின் பொய்களுக்கெல்லாம் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேஜஸ்வி யாதவ் பீகார் முழுவதும் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்தார்.
    • பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஜன் விஸ்வாஸ் நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது

    பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தயாராகி வருகிறது. லாலு பிரசாத் யாதவின் மகனும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் பீகார் முழுவதும் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்தார்.

    இந்நிலையில், பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஜன் விஸ்வாஸ் நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மத்தியப்பிரதேசத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தனது யாத்திரையை தள்ளி வைத்து விட்டு, பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேஜஸ்வி யாதவின் ஜன் விஸ்வாஸ் பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் கலந்து கொண்ட வீடியோவை தேஜஸ்வி யாதவ் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "15 மணி நேரம் தொடர் மழை, கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய லட்சக் கணக்கான மக்கள், குறுகிய நேரத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் என அனைத்தையும் மீறி, உங்கள் அளப்பரிய அன்பினாலும், தளராத ஆதரவினாலும், அபரிமிதமான ஒத்துழைப்பினாலும் இந்த சாதனைப் பேரணி நிறைவு பெற்றது" என தெரிவித்துள்ளார்.

    • 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்தார்.
    • இவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு.

    உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சம்மனில் சட்ட விரோதமாக சுரங்கங்களை ஒதுக்கிய வழக்கு தொடர்பாக விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் டெல்லி சென்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வாய்ப்பு இல்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    அகிலேஷ் யாதவ் இன்று லக்னோவில் பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் கட்சி அலுவலகத்தில் இருந்து வேறு எங்கும் செல்லும் திட்டம் தற்போதை வரை இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

    சமாஜ்வாடி கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில தலைவர் ராஜ்பால் காஷியப் கூறுகையில் "அகிலேஷ் யாதவ் பிடிஏ (Picchda- பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர்) ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றார்.

    சமாஜ்வாடி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி "அகிலேஷ் யாதவ் இன்று எங்கேயும் செல்லமாட்டார். லக்னோவில் நடைபெறும் கட்சி அலுவலக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்" என்றார்.

    சம்மன் தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "தேர்தல் வரும்போது நோட்டீஸ் வரும் என்பது எனக்குத் தெரியும். ஏன் இந்த பதட்டம்?. நீங்கள் (பா.ஜனதா) கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான பணிகளை செய்திருந்தால் ஏன் பதட்டம் அடைகிறீர்கள்?" எனத் தெரிவித்திருந்தார்.

    முன்னதாக,

    உத்தர பிரதேசத்தில் கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்தார். இவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    பொதுப்பணித்துறையினர் சட்ட விரோதமாக சுரங்கத்தை அனுமதித்ததாகவும், சுரங்கம் தோண்டுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்த போதும் சட்ட விரோதமாக உரிமங்களை புதுப்பித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டன.

    இதை தொடர்ந்து, சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் 2016-ம் ஆண்டு ஆரம்ப விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த சி.பி.ஐ., 2012-2013 வரையிலான காலக் கட்டத்தில் மாநில சுரங்கத்துறையை அகிலேஷ் யாதவ் கவனித்து வந்தபோது இந்த முறைகேடு நடந்ததாகவும், ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்-மந்திரி அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றம் சாட்டியது.

    அதனை தொடர்ந்து சுரங்க முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரகலா, சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.சி. ரமேஷ் குமார் மிஸ்ரா உள்ளிட்ட 11 பேர் மீது சி.பி.ஐ. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தது.

    இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.

    • ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்-மந்திரி அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றச்சாட்டு.
    • ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது.

    உத்தர பிரதேசத்தில் கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்தார். இவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    பொதுப்பணித்துறையினர் சட்ட விரோதமாக சுரங்கத்தை அனுமதித்ததாகவும், சுரங்கம் தோண்டுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்த போதும் சட்ட விரோதமாக உரிமங்களை புதுப்பித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டன.

    இதை தொடர்ந்து, சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் 2016-ம் ஆண்டு ஆரம்ப விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த சி.பி.ஐ., 2012-2013 வரையிலான காலக் கட்டத்தில் மாநில சுரங்கத்துறையை அகிலேஷ் யாதவ் கவனித்து வந்தபோது இந்த முறைகேடு நடந்ததாகவும், ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்-மந்திரி அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றம் சாட்டியது.

    அதனை தொடர்ந்து சுரங்க முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரகலா, சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.சி. ரமேஷ் குமார் மிஸ்ரா உள்ளிட்ட 11 பேர் மீது சி.பி.ஐ. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தது.

    இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

    வழக்கு தொடர்பான விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் இன்று நேரில் ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக உள்ளே எதிர் குரல் கொடுக்கும் நபர்கள் நமக்கு தெரிந்துவிடும்.
    • விருந்தை புறக்கணிக்கும்போது அவர்கள் எங்களுக்கும் எதிராக திரும்பவார்கள் என்பது தெரியும்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் 10 இடங்களுக்கான மாநிலங்களை எம்.பி. தேர்தல் நடைபெற்றது. ஏழு இடங்களில் பா.ஜனதா எளிதாக வெற்றி பெறும். 3 இடங்களில் சமஜ்வாடி கட்சி வெற்றி பெறும். ஆனால் பா.ஜனதா சில எம்.எல்.ஏ.க்களை இழுத்துள்ளதாக தகவல் வெளியானது. நேற்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்த விருந்தை எட்டு எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். இதனால் சமாஜ்வாடி கட்சியின் 3-வது வேட்பாளர் வெற்றி பெறுவது சந்தேகமானது.

    இந்த நிலையில்தான் இன்று காலை உத்தர பிரதேச மாநில சட்டமன்ற கொறடா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் 3-வது வேட்பாளர்ரை நிறுத்தியது கட்சியில் கலகம் விளைவிப்பவர்களை அடையாளம் காண்பதற்காகத்தான் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "எங்களுடைய 3-வது இடம் பொதுவாக கட்சியில் உள்ள உண்மையானவர்களை அடையாளம் காண்பதற்கான பரிசோதனை. இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக உள்ளே எதிர் குரல் கொடுக்கும் நபர்கள் நமக்கு தெரிந்துவிடும். இது எங்களுடைய 3-வது சீட்டின் வெற்றி. கட்சியின் வெற்றி உண்மையில் உள்ளது.

    விருந்தை புறக்கணிக்கும்போது அவர்கள் எங்களுக்கும் எதிராக திரும்பவார்கள் என்பது தெரியும். அவர்களுக்கு பல்வேறு பேக்கேஜ் வழங்கப்படும் எனத் தெரிவித்து இருப்பார்கள். கலகம் விளைவித்த அவர்கள் நீக்கப்படுவார்கள்" என்றார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு 252 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சமாஜ்வாடிக்கு 108 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். பா.ஜனதா ஏழு எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். சமாஜ்வாடி 3 பேரை தேர்வு செய்ய முடியும். ஆனால் பா.ஜனதா 8-வது ஒருவரை நிறுத்தியுள்ளதால் போட்டி நிலவுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உத்தர பிரதேசம், கர்நாடகா, இமாசல பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    • வரும் 29-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

    புதுடெல்லி:

    வருகிற ஏப்ரல் மாதம் 15 மாநிலங்களில் முடிவடைய உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இதில் சோனியா காந்தி, ஜே.பி.நட்டா உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வாகினர். உத்தர பிரதேசத்தில் 10 இடங்கள், கர்நாடகாவில் 4 இடங்கள் மற்றும் இமாசல பிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம் 15 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடகா, உத்தர பிரதேசம், இமாசல பிரதேசத்தில் உள்ள 15 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் லக்னோவில் தனது வாக்கைச் செலுத்தினார்.

    காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 4 மணிக்கு நிறைவடையும். வரும் 29-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

    • கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    • ராகுல்காந்தியுடன் இணைந்து கைகோர்த்து ஊர்வலமாக நடந்து சென்றார்.

    உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஜமால்பூரில் நடந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி இன்று கலந்து கொண்டார்.

    இந்த யாத்திரை நிகழ்ச்சி அம்ரோஹா, சம்பல், புலந்த்ஷாஹர், அலிகார், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா வழியாக பதேபூர் சிக்ரி செல்கிறது.

    இதில், ராகுல்காந்தியுடன் திறந்த ஜீப்பில் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் அமர்ந்து கொண்டு தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தவாறு சென்றனர்.

    காங்கிரஸ்- சமாஜ்வாதி கட்சி இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றி அடைந்து உள்ளதை தொடர்ந்து யாத்திரை நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து இன்று கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த யாத்திரை இந்தியா கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

    இந்திய ஒற்றுமை யாத்திரை உ.பி. ஆக்ரா நோக்கி மாலை 3.30 மணிக்கு வந்தது. அப்போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்யாதவ், கலந்து கொண்டார்.

    ராகுல்காந்தியுடன் இணைந்து கைகோர்த்து ஊர்வலமாக நடந்து சென்றார். இதனை பார்த்த தொண்டர்கள் உற்சாக கரகோஷமிட்டனர்.

    உத்தரபிரதேசம் ஆக்ராவில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், " பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வரும் நாட்களில், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பதே மிகப்பெரிய சவாலாகும். பாஜகவால் சிதைக்கப்பட்ட டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற இந்தியா கூட்டணி பாடுபடும்" என்றார்.

    • உத்தர பிரதேசத்தில் கடந்த முறை காங்கிரஸ் ஒரு தொகுதி மட்டுமே வெற்றி பெற்றது.
    • இந்த முறை காங்கிரசுக்கு 17 இடங்களை சமாஜ்வாதி ஒதுக்கியுள்ளது.

    லக்னோ:

    2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தேர்தல் நெருங்க நெருங்க இந்தக் கூட்டணி தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்வதில் தான் சிக்கல்.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை காங்கிரசுக்கு அதிக இடங்கள் கொடுக்க மறுத்துள்ளது.

    இதற்கிடையே, ராகுல் காந்தி தற்போது உத்தர பிரதேசத்தில்நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    நாங்கள் தரும் இடங்களை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ராகுல் காந்தி நடைபயணத்தில் கலந்துகொள்வேன் என அகிலேஷ் யாதவ் கண்டிஷன் போட்டதாகத் தெரிகிறது.

    உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே நேற்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இந்நிலையில், தனது கண்டிஷனுக்கு காங்கிரஸ் கட்சி ஓகே சொன்னதால், ராகுல் காந்தி யாத்திரையில் அகிலேஷ் பங்கேற்கிறார்.

    இதுதொடர்பாக அகிலேஷ் கூறுகையில், ஆக்ராவில் நடைபெறும் யாத்திரையில் நான் பங்கேற்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    • சமாஜ்வாடி கட்சியில் தேசிய பொதுச்செயலாளர் பதவியில் இருந்தவர்.
    • எம்எல்சி-யாகவும் இருந்த நிலையில், கட்சி உறுப்பினர் பதவி என அனைத்தில் இருந்தும் விலகல்.

    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. இவர் கடந்த 13-ந்தேதி தேசிய பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அப்போது தனக்கு எதிராக பாகுபாடு பார்ப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் உத்தர பிரதேச மாநில மேல்சபை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

    அவர் அகிலேஷ் யாதவுக்கு எழுதிய கடிதத்தில் "உங்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், கடந்த பிப்ரவரி 12-ந்தேதி உங்களுடன் பேசிய பிறகு, தேசிய பொதுச்செயலாளர் பதவியை 13-ந்தேதி ராஜினாமா செய்தேன். என்னுடன் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் முன்முயற்சி எடுக்கப்படாததால், கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு கடிதத்தில் "நான் சமாஜ்வாடி கட்சி சார்பில் மேல்சபைக்கு தேர்வு செய்யப்பட்டேன். இந்த நிலையில கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். மேலும் எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ராம்சரித்மனாஸ் மற்றும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக தான் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், கட்சி சார்பாக யாரும் குரல் கொடுக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உத்தர பிரதேசத்தில் கடந்த முறை காங்கிரஸ் ஒரு தொகுதி மட்டுமே வெற்றி பெற்றது.
    • 15 இடங்களுக்கு மேல் வழங்க முடியாது என அகிலேஷ் தெரிவித்துள்ளதாக தகவல்.

    2024 மக்களவை தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க இந்த கூட்டணி தாக்குப்பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ்- மற்ற கட்சிகள் இடையிலான இடங்கள் பங்கீடு தொடர்பான இடியாப்ப சிக்கல்தான்.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை காங்கிரஸ்க்கு அதிக இடங்கள் கொடுக்க மறுத்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டதாக தெரிகிறது. அம்மாநிலத்தில் உள்ள 80 இடங்களில் 11 இடங்களை காங்கிரஸ்க்கு அகிலேஷ் யாதவ் ஒதுக்கியதாக கூறப்பட்டது.

    ராகுல் காந்தி தற்போது நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது நடைபயணம் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைகிறது.

    இந்த நிலையில் 15 இடங்களுக்கு மேல் ஒன்று கூட அதிகமாக கொடுக்க முடியாது. இதை ஏற்றுக் கொண்டால்தான் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொள்வேன் என அகிலேஷ் யாதவ் கண்டிசன் போட்டதாக தெரிகிறது.

    இதனால் இந்தியா கூட்டணியில் அகிலேஷ் யாதவ் நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி 2019-ல் நாடு முழுவதும் 52 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இந்தி பேசும் மாநிலங்களில் அதன் வெற்றி மிகவும் குறைவாகும். உத்தர பிரதேசத்தில் ஒரு தொகுதியில்தான் வெற்றி பெற்றது. அதுவும் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டும்தான். அமேதி தொகுதியில் கூட ராகுல் காந்தி தோல்வயிடைந்தார். இதனால் அகிலேஷ் யாதவ் இறுதியாக 15 இடங்களுக்கு மேல் கொடுக்க மறுத்து வருகிறார்.

    மகாராஷ்டிராவில் சரத் பவார்- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    ×