இந்தியா
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கும் இதேபோல் கடந்த ஆண்டு பலமுறை முடக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
சமீப காலமாக இணையதளங்களை முடக்கம் செய்யப்படும் சம்பவம் உலக அளவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கி வருவதாக செய்திகள் வெளியாகி வந்துள்ளது.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் டுவிட்டர் கணக்கு இன்று காலை முடக்கப்பட்டது. அதை சிறிது நேரத்திற்கு முடக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் அதில் ரஷ்யாவுக்கு துணை நிற்போம், பிட்காய்ன் நன்கொடை பெறப்படுகிறது என பதிவிட்டிருந்தனர்.
சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கு செயல்பட தொடங்கியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முடக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
உக்ரைனில் போர் நிலவி வரும் சூழலில் அரசியல் தலைவர்களின் டுவிட்டர் கணக்கு முடக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்...எல்.ஐ.சி.யில் 20 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்