இந்தியா
மாயாவதி

உ.பி.யில் நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதி: மாயாவதி திட்டவட்டம்

Published On 2022-02-24 02:59 GMT   |   Update On 2022-02-24 02:59 GMT
சமாஜ்வாடி ஆட்சியில் இருந்தபோதெல்லாம் அனைத்து தரப்பினரும் துன்புறுத்தப்பட்டனர். கலவரம் வெடித்தது, குண்டர்கள் ராஜ்யம் நடந்தது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ :

உத்தரபிரதேச சட்டசபைக்கு நேற்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி லக்னோவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பகுஜன் சமாஜ் கட்சி இன்னும் தனது ஆதரவை தக்கவைத்திருப்பதாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதற்கு நன்றி. ஆனால், தலித் ஓட்டுகளை மட்டுமின்றி, முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டோர், உயர் சாதியினர் என அனைத்து தரப்பினரின் ஓட்டுகளையும் பெற்று வருகிறோம். அதனால், மார்ச் 10-ந் தேதி ஓட்டு எண்ணும்போது பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை பிடித்திருப்பதை பார்ப்பீர்கள். கடந்த 2007-ம் ஆண்டைப்போல், முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்.

ஆட்சியை பிடிப்பதாக சமாஜ்வாடி கட்சி காணும் கனவு நொறுங்கி விடும். சமாஜ்வாடி ஆட்சியில் இருந்தபோதெல்லாம் அனைத்து தரப்பினரும் துன்புறுத்தப்பட்டனர். கலவரம் வெடித்தது, குண்டர்கள் ராஜ்யம் நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News