இந்தியா
நேதாஜியின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க மம்தா பானர்ஜி கோரிக்கை
வங்காளத்திலிருந்து நேதாஜியின் எழுச்சி இந்திய வரலாற்றின் வரலாற்றில் நிகரற்றது என்று மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தா:
ஆங்கிலேயருக்கு எதிராக ராணுவ வீரர்களை திரட்டி பெரும் போர் புரிந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையடுத்து நேதாஜியின் ஆண்டு விழாவை 'பராக்ரம் திவாஸ்' (வீரம் நாள்) என அறிவித்து ஜனவரி 23 முதல் குடியரசு தின விழாவைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் கூறியதாவது:-
நேதாஜியின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று மீண்டும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். ஒட்டுமொத்த தேசமும் தேசிய தலைவருக்கு மரியாதை செலுத்தவும், தேக் நாயக் திபாசை பொருத்தமான முறையில் கொண்டாடவும் அனுமதிக்க வேண்டும்.
இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் நேதாஜி பற்றிய அட்டவணை காட்சிப்படுத்தப்படும். நமது நாட்டின் 75-வது சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் வங்காளத்தைச் சேர்ந்த மற்ற தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களும் இடம்பெறுவார்கள்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். வங்காளத்திலிருந்து நேதாஜியின் எழுச்சி இந்திய வரலாற்றின் வரலாற்றில் நிகரற்றது. தேசிய மற்றும் உலகளாவிய அடையாளமாக அவர் என்றும் இருப்பார்.
இவ்வாறு மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.