இந்தியா
காங்கிரசாருக்கு சட்டத்தை மதிக்கும் கலாசாரம் தெரியவில்லை: அஸ்வத் நாராயண்
மக்களின் நலனுக்காக காங்கிரசார் பாதயாத்திரை நடத்தவில்லை. டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் தங்களின் பலத்தை காட்டிக்கொள்ள இந்த பாதயாத்திரையை நடத்துகிறார்கள்.
பெங்களூரு :
உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் சட்டத்தை மதிப்பது ஒவ்வொருவரின் கடமை. இதற்கு முன்பு ஆட்சி நிர்வாகத்தை நடத்திய காங்கிரசாருக்கு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்ற கலாசாரம் தெரியவில்லை. பாதயாத்திரை நடத்தும் அவர்களின் நோக்கம் என்ன என்பது தற்போது வெட்டவெளிச்சமாக தெரிந்துவிட்டது. மக்களின் நலனுக்காக காங்கிரசார் பாதயாத்திரை நடத்தவில்லை.
டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் தங்களின் பலத்தை காட்டிக்கொள்ள இந்த பாதயாத்திரையை நடத்துகிறார்கள். கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பாதயாத்திரையை கைவிட வேண்டும் என்று அரசு உரிய அறிவுரையை காங்கிரசுக்கு வழங்கியது. மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்கு மத்திய அரசு நிர்வாக ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் சட்டத்தை மதிப்பது ஒவ்வொருவரின் கடமை. இதற்கு முன்பு ஆட்சி நிர்வாகத்தை நடத்திய காங்கிரசாருக்கு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்ற கலாசாரம் தெரியவில்லை. பாதயாத்திரை நடத்தும் அவர்களின் நோக்கம் என்ன என்பது தற்போது வெட்டவெளிச்சமாக தெரிந்துவிட்டது. மக்களின் நலனுக்காக காங்கிரசார் பாதயாத்திரை நடத்தவில்லை.
டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் தங்களின் பலத்தை காட்டிக்கொள்ள இந்த பாதயாத்திரையை நடத்துகிறார்கள். கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பாதயாத்திரையை கைவிட வேண்டும் என்று அரசு உரிய அறிவுரையை காங்கிரசுக்கு வழங்கியது. மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்கு மத்திய அரசு நிர்வாக ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.