search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வத் நாராயண்"

    • சட்டவிரோதமாக யார் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் தான் பயப்பட வேணடும்.
    • முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததும், அதற்காக ஒரு காரணத்தை கூறுவார்கள். பொதுவாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரியில்லை என்பார்கள். தேர்தல் ஆணையமே சரியில்லை என்றும் கூட காங்கிரஸ் தலைவர்கள் சொல்லி இருக்கின்றனர். தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக காங்கிரஸ் தலைவர்கள் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளனர்.

    இது காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் பேச்சு மூலமாகவே தெளிவாகி இருக்கிறது. ஏனெனில் கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்த தயாராக இருப்பதாக சுர்ஜேவாலாவும், சித்தராமையாவும் கூறி இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போதே பயம் வந்துள்ளது.

    தேர்தலில் தோல்வி அடைந்தால், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை காரணம் என்று கூறி தப்பிக்க முயற்சிப்பார்கள். சட்டவிரோதமாக யார் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் தான் பயப்பட வேணடும். சுர்ஜேவாலா எதற்காக பயப்பட வேண்டும். கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஆதரிக்க மக்கள் தயாராகி விட்டனர்.

    கர்நாடகத்தில் புதிதாக 12 லட்சம் இளம் வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர். அந்த இளம் வாக்காளர்கள் பா.ஜனதாவை ஆதரிக்க தயாராகி விட்டனர். முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது. பதவிக்கான போட்டி ஒரு போதும் நிற்க போவதில்லை. இதுவே அவர்களது தோல்விக்கான மற்றொரு காரணமாக அமைய போகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரவீன் நெட்டார் குடும்பம் அனுபவிக்கும் வேதனையை வேறு யாரும் அனுபவிக்க கூடாது.
    • பிரச்சினையை தூண்டி விடுபவர்கள் எங்களின் பொறுமையை சோதிக்கிறார்கள்.

    பெங்களூரு :

    உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டுள்ளார். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு முடிவுக்கட்ட எந்த வாய்ப்பும் வழங்காமல் கருணையின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் என்கவுண்டருக்கு தயாராக இருக்கிறோம். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.

    பிரச்சினையை தூண்டி விடுபவர்கள் எங்களின் பொறுமையை சோதிக்கிறார்கள். அதனால் எங்கள் முதல்-மந்திரி தெளிவான உத்தரவை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார். வரும் நாட்களில் குற்றம் புரிபவர்கள் இத்தகைய சம்பவங்களை நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். என்கவுண்டர் நடத்த நேரம் வந்துவிட்டது. அப்பாவி மக்களை காப்போம். பிரவீன் நெட்டார் குடும்பம் அனுபவிக்கும் வேதனையை வேறு யாரும் அனுபவிக்க கூடாது.

    இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

    ×