இந்தியா
அணை

பாராளுமன்றத்தில் நிறைவேறியது அணைகள் பாதுகாப்பு மசோதா

Published On 2021-12-02 15:09 GMT   |   Update On 2021-12-02 15:09 GMT
நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அணைகளை ஒரே சீராக பாதுகாப்பதற்காகவும், உருவாக்கப்பட்டதே அணை பாதுகாப்பு மசோதா.
புதுடெல்லி:

மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, அணைகள் பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீது இன்று நீண்ட விவாதம் நடைபெற்றது. மசோதாவுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநில எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அணைகள் பாதுகாப்பு மசோதாவை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என திமுக எம்.பி திருச்சி சிவா  வலியுறுத்தினார். அணைகள் மீது மாநிலங்களின் அதிகாரம் எந்த விதத்திலும் குறைக்கப்பட கூடாது என்றும் அவர் கூறினார். விவாதத்திற்கு பிறகு, அணைகள் பாதுகாப்பு மசோதா 2019 குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.

கடந்த 2019ஆம் ஆண்டு அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில், தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அணைகளை ஒரே சீராக பாதுகாப்பதற்காகவும், உருவாக்கப்பட்டதே அணை பாதுகாப்பு மசோதா. 2010ம் ஆண்டில் இருந்து இந்த மசோதா பல்வேறு அமர்வுகளில் தாக்கல் செய்தும் மாநில அரசுகளின் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்ற முடியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News