செய்திகள்
சித்தராமையா

பொதுச்செயலாளராக இருக்கும்படி ராகுல் காந்தி என்னிடம் கேட்டார்: ஆனால் மறுத்துவிட்டேன் என்கிறார் சித்தராமையா

Published On 2021-10-05 15:18 GMT   |   Update On 2021-10-05 15:18 GMT
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா மாநில அரசியலே போதும் எனத் தெரிவித்துள்ளார்.
கார்நாடக மாநில காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் சித்தராமையா. இவர் கர்நாடக மாநில முதல்வராகவும் இருந்துள்ளார். இவர் டெல்லிக்கு சென்றுள்ளார்.

டெல்லியில் உள்ள சித்தராமையா கூறுகையில் ‘‘ராகுல் காந்தி என்னை காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராகும்படி கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் நான் அந்த வேண்டுகோளை மறுத்துவிட்டேன். தேசிய அரசியலில் எந்தவிதமான ஆர்வமும் கிடையாது. கர்நாடாக மாநில அரசியலில் மட்டுமே இருக்கிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News