செய்திகள்
பிரதமர் மோடி

75வது சுதந்திர தினம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2021-08-15 00:53 GMT   |   Update On 2021-08-15 00:53 GMT
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், உங்கள் அனைவருக்கும் 75-வது சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்த ஆண்டு சுதந்திரத்தைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அம்ரித் மகோத்சவ் நாட்டு மக்களிடம் புதிய ஆற்றலையும், உணர்வையும் கொண்டு வரட்டும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News