செய்திகள்
கொலை

மனைவியை கொன்று எரித்துவிட்டு நாடகமாடிய கணவன் கைது

Published On 2021-06-29 08:40 GMT   |   Update On 2021-06-29 08:40 GMT
ஆந்திராவில் தான் சமூக ஆர்வலர் என கூறிக்கொண்டு வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் பணம் வாங்கி செலவழித்து வந்துள்ளார் கணவர்.
சித்தூர்:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரா புரத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி. மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரின் கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டி. சமூக ஆர்வலர் என கூறிக்கொண்டு வந்த இவர், வேலைக்கு செல்லாமல் தன் மனைவியிடம் பணம் வாங்கி செலவழித்து வந்துள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த 22ஆம் தேதி தன் மனைவியை அடித்து கொலை செய்த ஸ்ரீகாந்த், அவரின் சடலத்தை சூட்கேஸில் வைத்து திருப்பதி அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் எரித்துள்ளார். பின்னர் தன் மனைவி டெல்டா பிளஸ் வைரசால் உயிரிழந்ததால் எரித்துவிட்டதாக கூறவே உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து போலீசில் உறவினர்கள் புகார் அளிக்கவே அபார்ட்மெண்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது நடந்தது அத்தனையும் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News