search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife murder"

    • கந்தசாமி கடந்த சில வருடங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
    • ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க அலுவலர் தனது மனைவியின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட எருமைபட்டி கிராமம் கூத்தாடிபாளையம் பூசாரி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (78), ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி அலுவலர். இவரது மனைவி லட்சுமி(72). இவர்களுக்கு ராஜா, ஜெயக்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று இரவு கந்தசாமி வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு குடும்பத்தினருடன் தூங்கச் சென்றுள்ளார். கந்தசாமி மற்றும் லட்சுமி ஒரு அறையிலும் அவரது மகன்கள் மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கந்தசாமி தனது அருகே தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி லட்சுமியின் தலையில் அம்மிக் கல்லை தூக்கி போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் லட்சுமி பலியானார்.

    இதை அடுத்து சத்தம் கேட்டு எழுந்து வந்த அவரது மகன்கள் தங்களின் தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கந்தசாமி கடந்த சில வருடங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர் ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கொலை செய்த கந்தசாமியிடம் கொங்கணாபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க அலுவலர் தனது மனைவியின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெங்கடேசன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • பலத்த காயம் அடைந்த அனிதா ரத்த வெள்ளத்தில் அலறியபடி வீட்டில் இருந்து வெளியே சாலையில் ஓடினார்.

    திருப்போரூர்:

    திருப்போரூர், கன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன். சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனிதா (வயது 29). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேசனுக்கு மனைவி அனிதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.

    இதன்காரணமாக அனிதா கணவருடன் கோபித்துக் கொண்டு திருப்போரூர் அடுத்த சிறுதாவூரில் உள்ள தன்னுடைய தாய்வீட்டிற்கு அடிக்கடி செல்வதும் பின்னர் வெங்கடேசன் சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த அழைத்தும் வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த வெங்கடேசன் மீண்டும் மனைவி அனிதாவிடம் நடத்தை தொடர்பாக பேசி தகராறில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் கத்தியால் மனைவி அனிதாவின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அனிதா ரத்த வெள்ளத்தில் அலறியபடி வீட்டில் இருந்து வெளியே சாலையில் ஓடினார். இதனை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் அனிதா மயங்கி விழுந்தார்.

    இதுகுறித்து திருப்போரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய அனிதாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அனிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே வெங்கடேசனை திருப்போரூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • மகளை பார்க்க வேணு தனது மனைவியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
    • ஸ்ரீஜாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி குன்னம்தானம் பகுதியை சேர்ந்தவர் வேணு(வயது45). இவரது மனைவி ஸ்ரீஜா(35). இவர்களுக்கு பவித்ரா என்ற மகள் இருக்கிறார்.

    வேணு மற்றும் அவரது மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு எற்பட்டு வந்திருக்கிறது. இதனால் அவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்களது மகன் ஸ்ரீஜாவுடனே வசித்து வந்திருக்கிறார்.

    இந்நிலையில் மகளை பார்க்க வேணு தனது மனைவியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு நடந்துள்ளது. அதில் ஆத்திரமடைந்த வேணு, தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினார். பின்பு அவர் தனது கழுத்தையும் கத்தியால் அறுத்துக்கொண்டார்.

    ஸ்ரீஜாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு கணவன்-மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து கீழ்வாய்ப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு திருவல்லாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    ஸ்ரீஜா உடலில் 13 இடங்களில் ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்துள்ளன. கணவன்-மனைவி இருவரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவரால் கொல்லப்பட்ட ஸ்ரீஜா, தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மனைவியின் ஊருக்கு ஷாஜி வந்திருக்கிறார்.
    • அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த ஷாஜி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் அருகே உள்ள ஆலபடம்பு பகுதியை சேர்ந்தவர் ஷாஜி(வயது40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பிரசன்னா(38).

    ஷாஜி மற்றும் பிரசன்னாவுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரசன்னா கண்ணூர் கட்டிலபீடிகா பகுதியில் உள்ள பெற்றோரின் வீட்டில் வசித்துவந்தார்.

    இந்நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மனைவியின் ஊருக்கு ஷாஜி வந்திருக்கிறார். அப்போது அவர் மனைவியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    அதில் ஆத்திரமடைந்த ஷாஜி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து தலையை துண்டித்து கொலை செய்தார். பிரசன்னாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டிற்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது அங்கு பிரசன்னா தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த ஷாஜி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசன்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவியை தலை துண்டித்து கொன்ற ஷாஜியை தேடி வந்தனர். இந்நிலையில் பையனூர் போலீஸ் நிலையத்தில் அவர் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப தகராறில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கட்டிட தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் கண்ணூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெரியவர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது.
    • தகவல் அறிந்த சாப்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூரை அடுத்துள்ள வேப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி செல்வ பிரியா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சின்னசாமி அடிக்கடி வரதட்சணை கேட்டு மனைவியை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக செல்வபிரியா கேரளாவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெரியவர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சின்னசாமி தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று செல்வ பிரியா கழுத்தறுக்கப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சாப்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த சின்னசாமியை பிடித்து விசாரித்தபோது, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சின்னசாமியை கைது செய்தனர்.

    • லட்சுமியின் கணவர் ஜெயராஜ் என்பவருக்கும், புண்ணியவதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக முத்துவுக்கு சந்தேகம் இருந்தது.
    • புண்ணியவதியின் கழுத்தை முத்து அறுத்தபோது மற்றொரு மகள் சந்திரா தடுத்துள்ளார்.

    வேளச்சேரி:

    சென்னை சோழிங்கநல்லூர் காந்தி நகர் ஏரிக்கரை வசித்து வருபவர் முத்து. இவரது மனைவி புண்ணியவதி(வயது 46). இவர் சென்னை மாநகராட்சியில் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவு வேலை செய்து வந்தார். முத்து கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் லட்சுமி.

    இந்தநிலையில் லட்சுமியின் கணவர் ஜெயராஜ் என்பவருக்கும், புண்ணியவதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக முத்துவுக்கு சந்தேகம் இருந்தது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு 7 மணியளவில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த முத்து, மனைவி புண்ணியவதியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். இதில் புண்ணியவதி பரிதாபமாக இறந்தார்.

    புண்ணியவதியின் கழுத்தை முத்து அறுத்தபோது மற்றொரு மகள் சந்திரா தடுத்துள்ளார். அப்பொழுது அவருக்கு இடது கையில் வெட்டு விழுந்தது. அவர் காயத்துடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே முத்து தலைமறைவானார்.

    இச்சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துவை கைது செய்தனர்.

    • பெற்றோர்களின் வற்புறுத்தலால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர்.
    • கொலை செய்யப்பட்ட நித்திய காமாட்சியின் தாயார் இளஞ்சியம் அன்னவாசல் போலீசில் புகார் செய்தார்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அன்னவாசல் மேட்டு தெரு ஜெ.ஜெ,காலனி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 35). இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த அடைக்கலம் மகள் நித்திய காமாட்சி (24) என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.

    இந்த தம்பதியருக்கு அஸ்வந்த் என்ற மகனும் நிவாஸ்ரீபுவிஅட்சரா என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் சமீபகாலமாக மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் மனைவியுடன் அடிக்கடி சண்டைபோட்டு வந்தார்.

    பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது.

    இருந்த போதிலும் மனைவி மீதான கோபம் அடங்காத பால்ராஜ் கடந்த டிசம்பர் மாதம் நித்தியகாமாட்சி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது அடுப்பில் இருந்த நெருப்பு கனல்களை அள்ளி அவரது முதுகில் போட்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர்.

    பின்னர் பெற்றோர்களின் வற்புறுத்தலால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே மீண்டும் அவர்களுக்கிடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பால்ராஜ் இன்று அதிகாலை மனைவி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது அவரது தலையில் குழவிக்கல்லை போட்டார். இதில் அவரது தலை நொறுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே நித்திய காமாட்சி துடிதுடித்து இறந்தார்.

    பின்னர் போலீசுக்கு பயந்து பால்ராஜ் தன்தை தானே கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கொலை செய்யப்பட்ட நித்திய காமாட்சியின் தாயார் இளஞ்சியம் அன்னவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் குழவிக்கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு கணவன் முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக ஸ்ரீதர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
    • நடத்தை சந்தேகத்தில் தூங்கிய மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அருகே உள்ள சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது45). கல் குவாரியில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி(35). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஸ்ரீதர் மதுகுடித்து வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவும் மதுபோதையில் வந்த ஸ்ரீதர் மனைவியிடம் கடும் வாக்குவாதம் செய்தார். பின்னர் கணவன் -மனைவி இருவரும் தூங்கிவிட்டனர்.

    எனினும் ஆத்திரத்தில் இருந்த ஸ்ரீதர் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதிகாலை 4 மணிஅளவில் எழுந்த ஸ்ரீதர் தூங்கிக்கொண்டு இருந்த மனைவி செல்வராணியின் தலையில் அருகில் கிடந்த அம்மிக்கல்லை தூக்கிப்போட்டார். இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே செல்வராணி துடிதுடித்து இறந்தார். சத்தம் கேட்டு எழுந்த அவர்களது குழந்தைகள் தாய் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு பயத்தில் அலறினர்.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீதர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மனைவியை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர், சாலவாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். எடமச்சி பஸ் நிறுத்தம் அருகே நின்ற ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர். கொலையுண்ட செல்வராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக ஸ்ரீதர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நடத்தை சந்தேகத்தில் தூங்கிய மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மனைவி தரையில் பிணமாக கிடந்தார் என்று லேரி தெரிவித்தார்
    • ஜாம்பியா காவல்துறையின் முடிவை அமெரிக்க அதிகாரிகள் நம்பவில்லை

    அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள பாரடைஸ் வேலி டிரைவ் பகுதியில் பல் மருத்துவராக தொழில் புரிந்து வந்தவர் லேரி ருடால்ஃப். இவரது மனைவி பியான்கா ருடால்ஃப்.

    34 வருடங்கள் திருமண வாழ்க்கையில் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும், 2016ல் வைல்ட் லைஃப் சஃபாரி எனப்படும் வனவிலங்குகளை அவை வசிக்கும் வனங்களிலேயே வாகனத்தில் அமர்ந்தபடி காணும் சுற்றுலாவிற்காக ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவிற்கு சென்றிருந்தனர்.

    சுற்றுலா முடிந்து ஊருக்கு திரும்பும் நாளான அக்டோபர் 11 அன்று புறப்பட தயாராகி கொண்டிருந்தனர்.

    அப்போது பியான்கா அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையில் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். தனது மனைவி தற்கொலை செய்து கொண்டார் என ஜாம்பிய காவல்துறையிடம் லேரி கூறினார்.

    இது குறித்து அவர் கூறும் போது, "நான் குளியலறையில் இருந்தேன். ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. நான் உடனே பதற்றத்துடன் வெளியில் வந்து பார்த்தேன். அப்போது என் மனைவி தரையில் பிணமாக கிடந்தார். அவர் உடலை சுற்றி எங்கும் ரத்தமாக இருந்தது," என்று அவர் தெரிவித்தார்.

    ஜாம்பியா நாட்டு புலனாய்வு அதிகாரிகள், தங்கள் விசாரணையில் பியான்காவின் மரணத்தை தற்கொலை என முடிவு செய்தனர். இதனையடுத்து காப்பீட்டு நிறுவனமும் காப்பீடு தொகையை முழுமையாக லேரியிடம் வழங்கியது.

    ஆனால் பியான்காவின் மரணம் தற்கொலையாக இருக்க முடியாது என அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் வல்லுனர்கள் ஆகியோரின் ஆய்வில் பியான்காவின் இருதயத்தை துளைத்த துப்பாக்கி குண்டு, 2 அல்லது 3.5 அடி தூரத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்றும் அவர் தன்னைத்தானே சுட்டு கொண்டு இறந்திருந்தால் இது போன்ற இடைவெளி வர வாய்ப்பே இல்லை எனவும் முடிவுக்கு வந்தது.

    லேரியின் வாக்குமூலத்தை நம்பாத அமெரிக்க மத்திய புலனாய்வு துறை, பல நாடுகளுக்கு சென்று பல சாட்சிகளை விசாரித்து, ஒரு நீண்ட விசாரணையை நடத்தியது. இறுதியாக குற்றம் நடந்த ஐந்த வருட காலம் கழித்து தக்க ஆதாரங்களுடன் லேரியை கைது செய்தது. அவரை விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    லேரிக்கு பியான்காவின் பெயரில், பெருமளவில் எடுக்கப்பட்டிருந்த ஆயுள் காப்பீட்டுத்தொகையை தனதாக்கி கொள்ளும் ஆசை வந்தது. மேலும் அவருக்கு லோரி மில்லிரான் எனும் காதலியும் இருந்தார். பியான்காவை சந்தேகம் வராமல் கொன்று காப்பீட்டுத்தொகையை உரிமை கொண்டாடினால், லோரியை திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக வாழ எந்த தடையும் இருக்காது என்ற முடிவுக்கு லேரி வந்தார்.

    இதனை தொடர்ந்து சுற்றுலா செல்லும் இடத்தில் மனைவியை லேரி சுட்டு கொலை செய்தார். டென்வர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வந்திருக்கிறது. இதன்படி, லேரி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், அபராதமாக சுமார் ரூ.125 கோடியும் ($15 மில்லியன்) விதிக்கப்பட்டிருக்கிறது.

    குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவரது காதலி லோரி மில்ரியானுக்கு கடந்த ஜூன் மாதம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க புலனாய்வு துறையின் திறமையையும், உண்மையையை வெளியில் கொண்டு வர அவர்கள் எடுத்த முயற்சிகளையும் அனைவரும் பாராட்டுகின்றனர்.

    • தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவர் அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    • நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை கொலை செய்த அவரது கணவர் கோவிந்தனை கைது செய்தனர்.

    ராசிபுரம்:

    சேலம் அருகே உள்ள கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 39). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ராதா (33). வீட்டு வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த தம்பதியினருக்கு கனிஷ்கா (11) என்ற 1 மகளும், கோகுல் (7) என்ற 1 மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் ராதா குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி கடந்த 3 மாதங்களாக நாமகிரிபேட்டை அருகே உள்ள ஈச்சப்பாறையில் மாமனார் ரமனா (63) குடும்பத்தினருடன் கோவிந்தன், அவரது மனைவி ராதா, குழந்தைளுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கோவிந்தனுக்கு மனைவி ராதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 11 மணியளவில் குடிபோதையில் இருந்த கோவிந்தன், குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த மனைவி ராதாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டு சரமாரியாக தாக்கினார்.

    இதை கண்ட குழந்தைகள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராதாவை நாமகிரிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று சேர்த்தனர். அப்போது ராதாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு ராதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இது பற்றி நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை கொலை செய்த அவரது கணவர் கோவிந்தனை கைது செய்தனர்.

    தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவர் அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • முத்துவள்ளி கடந்த மாதம் 30-ந்தேதி நாலூர் விலக்கு பகுதியிலுள்ள தனது கணவரான பழனியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்ப தகராறில் முத்துவள்ளி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள கட்டாலங்குளம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பழனி (வயது 27). இவர் டிப்பர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பனைக்குடி பகுதியை சேர்ந்த பாண்டி மகள் முத்துவள்ளி (24) என்பவருக்கும் கடந்த 2018-ல் திருமணம் நடந்தது.

    திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் இந்த தம்பதியினருக்கு குழந்தையில்லை. பழனி லாரி டிரைவராக பணிபுரிந்து வருவதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று தங்கிக்கொள்வது வழக்கம். இருந்தபோதிலும் தினமும் மனைவியுடன் செல்போனில் பேசி நலம் விசாரித்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

    காலப்போக்கில் மனைவியுடனான நெருக்கம் குறைந்ததாக பழனி எண்ணினார். மேலும் சாவரியை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பும் சமயங்களில் மனைவி தன்னுடன் அதிகம் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் எண்ணி கவலைப்பட்டார். இதுவே நாளுக்கு நாள் அவரது மனதில் புரையோடி வளர்ந்தது. அது மனைவி முத்துவள்ளியின் நடத்தையில் சந்தேகப்படும் அளவுக்கு வந்தது.

    இதையடுத்து பழனி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரை காலி செய்து விட்டு, மதுரை அவனியாபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார். அங்கு கணவன், மனைவி இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். ஒருபுறம் குழந்தை இல்லாத ஏக்கம், மறுபுறம் மனைவியின் நடத்தை மீதான சந்தேகம் இரண்டும் சேர்ந்து பழனியை பாடாய்படுத்தியது.

    அதுவே தம்பதிக்கிடையே பகையாக வளர்ந்து தகராறை ஏற்படுத்தியது. அப்போதெல்லாம் பழனி, தனது மனைவி முத்துவள்ளியை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்துவள்ளி கணவரை பிரிந்து, தனது சொந்த ஊரான பனைக்குடி கிராமத்திற்கு சென்றுவிட்டார். அங்கு தாய் முத்துமாரியுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இருவீட்டாரின் உறவினர்கள் பழனி, முத்துவள்ளி இருவரையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தி மீண்டும் கணவருடன் சென்று குடும்பம் நடத்த அனுப்பி வைத்தனர். ஆனால் இருவருக்கிடையேயான பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

    இதற்கிடைய முத்துவள்ளி கடந்த மாதம் 30-ந்தேதி நாலூர் விலக்கு பகுதியிலுள்ள தனது கணவரான பழனியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது அக்காள் கார்த்தீஸ்வரி தங்கையான முத்துவள்ளியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

    அதன்பேரில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் முத்துவள்ளி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் அ.முக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட முத்துவள்ளியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரது நாடியின் கீழ்பகுதி, நெஞ்சு, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காணப்பட்ட காயங்களால் சந்தேகமடைந்த போலீசார் அவரது கணவர் பழனியிடம் அதிரடியாக விசாரணையை தொடங்கினர். இதில் பழனி தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதுதொடர்பாக அவர் போலீசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், சம்பவத்தன்று முத்துவள்ளியின் நடத்தையின் மீது ஏற்கனவே ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பழனி, முத்துவள்ளியை அடித்துக்கொன்றதும் தெரிவித்துள்ளார். கொலையை மறைக்கவே முத்துவள்ளி தனக்குத்தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறி தான் நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து தற்கொலை வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும் மனைவியை அடித்துக்கொலை செய்த கணவர் பழனியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அருப்புக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பழனி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • மனைவி இறந்ததை உறுதி செய்த போஷம் அங்கிருந்து தப்பி சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள போஷத்தை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் மஞ்சரியாலா மாவட்டம் சென்னூரு மண்டலம் கிஷ்டம்பேட்டையை சேர்ந்தவர் போஷம். கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கரம்மா. இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று வந்த போஷம் தனது மனைவியிடம் கோழி கறி குழம்பு வைக்க வேண்டும் என தெரிவித்துவிட்டு வெளியே சென்றார்.

    பின்னர் மது போதையில் வீட்டிற்கு வந்த போஷம் சாப்பாட்டிற்கு கோழி கறி குழம்பு கேட்டார். ஆனால் சங்கரம்மா கத்திரிக்காய் குழம்பு ஊற்றினார். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த போஷம் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    நள்ளிரவு சங்கரம்மா வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து சங்கரம்மா தலையில் பலமாக வெட்டினார்.

    இதில் தலை இரண்டாக பிளந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சங்கரம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மனைவி இறந்ததை உறுதி செய்த போஷம் அங்கிருந்து தப்பி சென்றார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் சங்கரம்மா வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு சங்கரம்மா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து சென்னூரு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்கரம்மா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள போஷத்தை தேடி வருகின்றனர்.

    ×