செய்திகள்
கொரோனா பரிசோதனை

மும்பையில் புதிதாக 1,416 பேருக்கு கொரோனா

Published On 2021-05-22 02:24 GMT   |   Update On 2021-05-22 02:24 GMT
மும்பையில் கட்டுப்பாட்டு மண்டலமாக 69 பகுதிகளும், 273 கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டு இருப்பதாகவும் மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை :

மும்பையில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று மும்பையில் புதிதாக 1,416 ஆக கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 95 ஆயிரத்து 80 ஆக அதிகரித்தது. இதேபோல சிகிச்சை முடிந்து ஆயிரத்து 766 பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இதனால் தற்போது சிகிச்சையில் 29 ஆயிரத்து 103 பேர் இருந்து வருகின்றனர்.

கொரோனாவினால் நேற்று மேலும் 54 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்து 522 ஆக அதிகரித்து உள்ளது. மும்பையில் கட்டுப்பாட்டு மண்டலமாக 69 பகுதிகளும், 273 கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டு இருப்பதாகவும் மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News