செய்திகள்
கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 17 கோடியை தாண்டியது

Published On 2021-05-09 18:02 GMT   |   Update On 2021-05-09 18:02 GMT
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:

இந்தியாவில் பல்வேறு வகையான பயனாளர்களை அடையாளம் கண்டறிந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மே 1-ம் தேதி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிவேகத்தில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது 2-வது அலை நாட்டில் வேகமெடுத்துள்ளதால் தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை மத்திய, மாநில அரசுகள் மேலும் அதிகரித்து இருக்கின்றன. இதன்மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 17 கோடியைத் தாண்டியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News