செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் 17ந் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு- கெஜ்ரிவால்

Published On 2021-05-09 07:04 GMT   |   Update On 2021-05-09 07:04 GMT
டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. அதேசமயம் ஆக்சிஜன் பற்றாக்குறை, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் சுகாதாரத்துறை கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மே 10ம் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில், டெல்லியில் தற்போதைய கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு, அதாவது மே 17ம் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை நீட்டிப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News