செய்திகள்
மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ

மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ-வுக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2021-04-17 19:44 GMT   |   Update On 2021-04-17 19:44 GMT
மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சமடையத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2 லட்சத்து 34 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 45 லட்சத்து 26 ஆயிரத்து 609 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய விளையாட்டுத் துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான கிரண் ரிஜிஜூ-வுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், தொடர்ச்சியான பரிசோதனைக்கு பின்னர் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் உடல்ரீதியிலாக நலமுடன் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News