செய்திகள்
டெல்லி சிறைகளில் கொரோனா பாதித்த 67 கைதிகளுக்கு சிகிச்சை
டெல்லியில் திகார், ரோகிணி, மண்டோலி என்ற 3 சிறைகள் உள்ளன. அவற்றில் இதுவரை மொத்தம் 190 கைதிகளுக்கும், 304 சிறை ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி:
டெல்லியில் திகார், ரோகிணி, மண்டோலி என்ற 3 சிறைகள் உள்ளன. அவற்றில் இதுவரை மொத்தம் 190 கைதிகளுக்கும், 304 சிறை ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
121 கைதிகளும், 293 ஊழியர்களும் குணமடைந்து விட்டனர். 2 கைதிகள் இறந்து விட்டனர். 67 கைதிகளும், 11 ஊழியர்களும் இன்னும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களில், மண்டோலி சிறை சூப்பிரண்டு, திகார் சிறை டாக்டர்கள் 2 பேர் ஆகியோரும் அடங்குவர். இந்த தகவலை சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் தெரிவித்தார்.
டெல்லி சிறைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது.
டெல்லியில் திகார், ரோகிணி, மண்டோலி என்ற 3 சிறைகள் உள்ளன. அவற்றில் இதுவரை மொத்தம் 190 கைதிகளுக்கும், 304 சிறை ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
121 கைதிகளும், 293 ஊழியர்களும் குணமடைந்து விட்டனர். 2 கைதிகள் இறந்து விட்டனர். 67 கைதிகளும், 11 ஊழியர்களும் இன்னும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களில், மண்டோலி சிறை சூப்பிரண்டு, திகார் சிறை டாக்டர்கள் 2 பேர் ஆகியோரும் அடங்குவர். இந்த தகவலை சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் தெரிவித்தார்.
டெல்லி சிறைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது.