செய்திகள்
காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
தெற்கு காஷ்மீரின், அனந்தநாக் மாவட்டம், ஷால்குல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள், ஜம்மு காஷ்மீர் போலீசார், மத்திய ரிசர்வ் போலீசார் ஆகியோர் இணைந்து இன்று காலை பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஷிரிகுபாரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கு இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களது பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.
தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
தெற்கு காஷ்மீரின், அனந்தநாக் மாவட்டம், ஷால்குல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள், ஜம்மு காஷ்மீர் போலீசார், மத்திய ரிசர்வ் போலீசார் ஆகியோர் இணைந்து இன்று காலை பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஷிரிகுபாரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கு இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களது பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.
தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.