செய்திகள்
பெங்களூருவில் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.4 கோடி வசூல்

பெங்களூருவில் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.4 கோடி வசூல்

Published On 2021-02-17 02:01 GMT   |   Update On 2021-02-17 02:01 GMT
கடந்த ஒரு வாரத்தில் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.4 கோடியை, போக்குவரத்து போலீசார் வசூல் செய்து உள்ளனர்.
பெங்களூரு :

பெங்களூருவில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் நகர் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்கள், சிக்னலை மதிக்காமல் செல்பவர்கள் உள்பட பல்வேறு வழிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக, வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.4 கோடியை போலீசார் அபராதமாக வசூல் செய்து உள்ளனர்.

அதாவது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வது, சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டுவது, சிக்னலில் நிற்காமல் செல்வது, ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டுவது உள்பட பல்வேறு வழிகளில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து கடந்த 9-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 7 நாட்களில் ரூ.4 கோடியை போக்குவரத்து போலீசார் அபராதமாக வசூலித்து உள்ளனர். மேலும் அபராத தொகை கட்டாதவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தும் எடுத்து சென்றனர்.
Tags:    

Similar News