செய்திகள்
கோப்புப்படம்

உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற மேல்சபை எம்.எல்.ஏ. பதவிக்கு பா.ஜ.க.வினர் 10 பேர் வேட்புமனு தாக்கல்

Published On 2021-01-19 00:22 GMT   |   Update On 2021-01-19 00:22 GMT
உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற மேல்சபை எம்.எல்.ஏ. பதவிக்கு பா.ஜ.க. சார்பில் 10 பேர் சட்டமன்ற மேல்சபை தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் 12 சட்டமன்ற மேல்சபை எம்.எல்.ஏ.க்கள் பதவி காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கு நாளை மறுதினம் (21-ந்தேதி) தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கடந்த 15-ந்தேதி சமாஜ்வாடி கட்சி சார்பில் 2 பேர் இந்த பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே நேற்று ஆளும் பா.ஜ.க. சார்பில் 10 பேர் சட்டமன்ற மேல்சபை தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்தனர். அப்போது முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மாநில பா.ஜ.க. தலைவர் சுவேந்திர தியோ சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

12 மேல்சபை எம்.எல்.ஏ.க்கள் பதவிக்கு 12 பேர் மட்டுமே இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதால் அனைவருமே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
Tags:    

Similar News