செய்திகள்
கோப்பு படம்.

டெல்லியில் இன்று 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2021-01-10 13:29 GMT   |   Update On 2021-01-10 13:29 GMT
டெல்லியில் இன்று 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,30,200 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,30,200 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் இன்று 12 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து அங்கு இதுவரை, கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,678 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 3,468 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 6,16,054 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News