செய்திகள்
ஏழைகளுக்குகொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க மாயாவதி கோரிக்கை
சுகாதாரப்பணியாளர்களுடன் சேர்த்து, மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ:
கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வரவேற்றுள்ளார்.
அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இதில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். சுகாதாரப்பணியாளர்களுடன் சேர்த்து, மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வரவேற்றுள்ளார்.
அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இதில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். சுகாதாரப்பணியாளர்களுடன் சேர்த்து, மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.