செய்திகள்
மாயாவதி

ஏழைகளுக்குகொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க மாயாவதி கோரிக்கை

Published On 2021-01-04 00:01 GMT   |   Update On 2021-01-04 00:01 GMT
சுகாதாரப்பணியாளர்களுடன் சேர்த்து, மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ:

கோவி‌ஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வரவேற்றுள்ளார்.

அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இதில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். சுகாதாரப்பணியாளர்களுடன் சேர்த்து, மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News