செய்திகள்
சாலை விபத்து

உத்தரபிரதேசத்தில் கார் - லாரி மோதி விபத்து - 8 பேர் பலி

Published On 2020-12-02 21:05 GMT   |   Update On 2020-12-02 21:36 GMT
உத்தரபிரதேசத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே காரில் இருந்த 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ:

உத்தரபிரதேசத்தின் கவுசாம்பி மாவட்டம் கரசதம் பகுதியில் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. ஒரு வளைவில் சென்றபோது திடீரென லாரியின் டயர் வெடித்ததால் நிலைதடுமாறி எதிரே திருமண கோஷ்டியினர் வந்த கார் மீது மோதியது.

இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே காரில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
Tags:    

Similar News