செய்திகள்
மகாத்மா காந்தி சிலை

பாராளுமன்ற மகாத்மா காந்தி சிலை இடம் மாறுகிறது

Published On 2020-11-23 01:12 GMT   |   Update On 2020-11-23 01:12 GMT
புதிய பாராளுமன்றம் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள மகாத்மா காந்தி சிலை இடம் மாறுகிறது.
புதுடெல்லி:

பாராளுமன்ற எம்.பி.க்கள் அந்த வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் அல்லது தர்ணா நடத்துவது வழக்கம்.

தற்போது புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கான வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. புதிய பாராளுமன்றத்தின் முன் பகுதியில் காந்தி சிலை நிறுவ வேண்டும்.

எனவே, தற்போது அமைந்துள்ள காந்தி சிலையை பெயர்த்தெடுத்து புதிய இடத்தில் வைக்க வேண்டும். அதேபோல், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மற்ற சிலைகளும் இடம் மாற வேண்டும். புதிய கட்டிடம் கட்டும் வரை வேறொரு இடத்தில் இந்த சிலைகள் வைக்கப்படும். 

மகாத்மா காந்தி சிலை உள்பட மற்ற சிலைகளையும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் மிகவும் கவனமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News