செய்திகள்
கைது

கோழிக்கோடு அருகே 6 வயது சிறுமி பலாத்காரம்- தொழிலாளி போக்சோவில் கைது

Published On 2020-11-08 09:45 GMT   |   Update On 2020-11-08 09:45 GMT
கோழிக்கோடு அருகே 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கோழிக்கோடு:

கோழிக்கோடு மாவட்டம் பாலுச்சேரி பகுதியில் உன்னிக்குளம் உள்ளது. இங்குள்ள கல்குவாரியில் நேபாள நாட்டை சேர்ந்த தொழிலாளி தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இதேபோல பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் அந்த பகுதியில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று தொழிலாளியின் மனைவி, அதே பகுதியில் வசித்து வரும் உறவினரை பார்க்க சென்றார். அவர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரைத்தேடி தொழிலாளி சென்றார். அப்போது தனது மூத்த மகள் 6 வயது சிறுமியிடம், மற்ற 2 குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் 6 வயது சிறுமி திடீரென பயங்கரமாக சத்தம்போட்டார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றனர். அப்போது சிறுமியின் தலையில் காயம் இருந்தது. தொடர்ந்து அவர் அழுது கொண்டே இருந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுமியை பரிசோதனை செய்ததில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பாலுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தொழிலாளியின் வீட்டிற்கு அதே பகுதியில் வசிக்கும் நெல்லியாம்பாலத்தை சேர்ந்த தொழிலாளி ரிதீஷ் வந்து சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, தாக்கியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News