செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

தேவேந்திர பட்னாவிஸ் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்

Published On 2020-11-04 20:50 GMT   |   Update On 2020-11-04 20:50 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த அக்டோபர் 25-ம் தேதி கண்டறியப்பட்டது. இதையடுத்து, தெற்கு மும்பையிலுள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள பட்னாவிஸ் வீடு திரும்பினார். மேலும் சில நாள்களுக்கு அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News