செய்திகள்
கொரோனா சோதனை

கர்நாடகத்தில் கொரோனாவில் இருந்து 7½ லட்சம் பேர் குணமடைந்தனர்

Published On 2020-11-01 01:44 GMT   |   Update On 2020-11-01 01:44 GMT
கர்நாடகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7½ லட்சத்தை தாண்டி உள்ளதாக, சுகாதாரத்துறை கூறியுள்ளது.
பெங்களூரு :

கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 20 ஆயிரத்து 398 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 3,014 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 23 ஆயிரத்து 412 ஆக உயர்ந்து உள்ளது. புதிதாக பாகல்கோட்டையில் 24 பேர், பல்லாரியில் 70 பேர், பெலகாவியில் 35 பேர், பெங்களூரு புறநகரில் 44 பேர், பெங்களூரு நகரில் 1,621 பேர், பீதரில் 3 பேர், சாம்ராஜ்நகரில் 28 பேர், சிக்பள்ளாப்பூரில் 33 பேர், சிக்கமகளூருவில் 35 பேர், சித்ரதுர்காவில் 59 பேர், தட்சிண கன்னடாவில் 95 பேர், தாவணகெரேயில் 47 பேர், தார்வாரில் 27 பேர், கதக்கில் 23 பேர், ஹாசனில் 173 பேர், ஹாவேரியில் 29 பேர், கலபுரகியில் 32 பேர், குடகில் 17 பேர், கோலாரில் 47 பேர், கொப்பலில் 8 பேர், மண்டியாவில் 89 பேர், மைசூருவில் 161 பேர், ராய்ச்சூரில் 16 பேர், ராமநகரில் 12 பேர், சிவமொக்காவில் 18 பேர், துமகூருவில் 53 பேர், உடுப்பியில் 49 பேர், உத்தர கன்னடாவில் 24 பேர், விஜயாப்புராவில் 122 பேர், யாதகிரியில் 20 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 11 ஆயிரத்து 140 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். நேற்று புதிதாக 28 பேர் மட்டுமே இறந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 168 ஆக உள்ளது. பெங்களூரு நகரில் 17 பேர், பல்லாரி, மைசூருவில் தலா 2 பேர், தட்சிண கன்னடா, தார்வார், கோலார், ராமநகர், சிவமொக்கா, துமகூரு, விஜயாப்புராவில் தலா ஒருவர் உயிரிழந்து உள்ளனர்.

நேற்று புதிதாக 7 ஆயிரத்து 468 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதன்மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 57 ஆயிரத்து 208 ஆக உயர்ந்து உள்ளது. 55 ஆயிரத்து 17 பேர் சிகிச்சையில் உள்ளனர். 956 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று ஒரு லட்சத்து ஆயிரத்து 556 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 79 லட்சத்து 5 ஆயிரத்து 868 பேரின் ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News