செய்திகள்
யோகி ஆதித்யநாத்

ராமர் கோவில் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் - பீகார் தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் பேச்சு

Published On 2020-10-20 20:54 GMT   |   Update On 2020-10-20 20:54 GMT
ராமர் கோவில் கட்டுமானம் குறித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக பீகார் தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் பேசினார்.
பாட்னா:

பீகார் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, பாபுவா மாவட்டம் ராம்கார் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் ராமர் பெயரை பயன்படுத்தினார். அவர் பேசியதாவது:-

ராமர் கோவில் கட்டுமானம் குறித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். ராமர் பிறந்த இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அங்கு அழகிய கோவில் வரப்போகிறது.

பீகார் மக்களின் முன்னேற்றத்துக்காக பிரதமர் மோடியும், முதல்-மந்திரி நிதிஷ் குமாரும் கூட்டாக பாடுபட்டு வருகின்றனர். ஊரடங்கின்போது, டெல்லியில் இருந்து பீகார் மக்களை ஆம் ஆத்மியும், காங்கிரசும் விரட்டி அடித்தன. ஆனால், உத்தரபிரதேசத்தில் இருந்த பீகார் மக்களுக்கு நாங்கள் தேவையான உதவிகள் அளித்தோம்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News