செய்திகள்
கேரளாவில் மேலும் 8135 பேருக்கு கொரோனா
கேரளாவில் மேலும் 8,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத்தில் மேலும் 8,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் ஒரே நாளில் 8,135 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கொரோனாவில் இருந்து 2828 பேர் இன்று குணமடைந்துள்ளனர். தற்போது 72,339 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.