செய்திகள்
சிகிச்சை குறித்து விளக்கும் டாக்டர்

மகாராஷ்டிராவில் மேலும் 18,317 பேருக்கு கொரோனா - 14 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

Published On 2020-09-30 15:44 GMT   |   Update On 2020-09-30 15:44 GMT
மகாராஷ்டிராவில் இன்று மேலும் 18.317 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அங்கு கொரோனாவால் 481 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 18,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 481 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மகாராஷ்டிராவில் மேலும் 18,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்குகிறது.

இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 481 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து 10, 88,322 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2,59,033 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News