செய்திகள்
குஜராத்தில் ஓ.என்.ஜி.சி. தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
குஜராத்தின் சூரத் நகரில் மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எரிவாயு தொழிற்சாலையில் 3 குழாய்கள் வெடித்து சிதறின
சூரத்:
குஜராத்தின் சூரத் நகரில் மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எரிவாயு தொழிற்சாலை உள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலை நுழைவு வாயில் முனையத்தில் ஏற்பட்ட இந்த தீ மளமளவென பரவியது. இதனால் அங்கு அடுத்தடுத்து 3 குழாய்கள் வெடித்து சிதறின. இந்த சத்தம் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டது. மேலும் தொழிற்சாலை முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனே ஓ.என்.ஜி.சி. நிறுவன தீயணைப்பு வாகன உதவியுடன் ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி தீயணைப்புத்துறையினரும், அருகில் உள்ள தொழிற்சாலை தீயணைப்பு ஊழியர்களும் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தொழிற்சாலை சீரமைக்கப்பட்டு விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.
குஜராத்தின் சூரத் நகரில் மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எரிவாயு தொழிற்சாலை உள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலை நுழைவு வாயில் முனையத்தில் ஏற்பட்ட இந்த தீ மளமளவென பரவியது. இதனால் அங்கு அடுத்தடுத்து 3 குழாய்கள் வெடித்து சிதறின. இந்த சத்தம் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டது. மேலும் தொழிற்சாலை முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனே ஓ.என்.ஜி.சி. நிறுவன தீயணைப்பு வாகன உதவியுடன் ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி தீயணைப்புத்துறையினரும், அருகில் உள்ள தொழிற்சாலை தீயணைப்பு ஊழியர்களும் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தொழிற்சாலை சீரமைக்கப்பட்டு விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.