செய்திகள்
இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. 84 வயதாகும் அவர் வழக்கமான சோதனைக்கான மருத்துவமனை சென்றார். அப்போது அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
அவருக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறலாம் எனத் தெரிகிறது.
இதற்கிடையே தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், பரிசோதனை மேற்கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.