செய்திகள்
கே.கே.ஷைலஜா

கேரளாவில் மேலும் 1211 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-08-09 18:07 GMT   |   Update On 2020-08-09 18:07 GMT
கேரளாவில் மேலும் 1,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளா மாநிலத்தில் மேலும் 1,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சுகாதாரத் துறை மந்திரி கே.கே.ஷைலஜா கூறுகையில், மாநிலத்தில் ஒரே நாளில் 1,211 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 34,331 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது 12,347 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனாவில் இருந்து 21,836 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News