செய்திகள்
திப்பு சுல்தான்

கர்நாடகாவில் 7-ம் வகுப்பு புத்தகத்தில் இருந்து திப்பு சுல்தான் பாடம் நீக்கம்

Published On 2020-07-28 16:23 GMT   |   Update On 2020-07-28 16:23 GMT
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாடத்திட்டத்தை குறைக்க திட்டமிட்டுள்ள கர்நாடகா, சமூக அறிவியல் புத்தகத்தில் திப்பு சுல்தான் பாடத்தை நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் 1-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரையிலான இறுதித் தேர்வை பெரும்பாலான மாநில அரசுகள் ரத்து செய்தன. ஜூன் மாதம் 2020-2021 ஆண்டுக்கான பாடங்கள் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வராததால் பள்ளிக்கூடத்தை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை எடுத்து வருகிறது. ஆனால், அரசு பள்ளிகள் இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. சிபிஎஸ்சி 2020-2021-ம் ஆண்டிற்கு மட்டும் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் மாநிலங்களும் பாடத்திட்டத்தை குறைக்க முடிவு செய்துள்ளன.

கர்நாடக அரசும் அதற்கான பணிகளில் களம் இறங்கியுள்ளது. 7-ம் வகுப்பான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ஏற்கனவே திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு குறித்த பாடம் இடம் பெற்றிருந்தது. தற்போது அதை கர்நாடக அரசு நீக்கியுள்ளது. அதேவேளையில் 6-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பில் திப்பு சுல்தான் குறித்த பாடம் இருக்கும் எனத்தெரிவித்துள்ளது.

குறைக்கபட்ட பாடத்திட்டத்தை கர்நாடக பாடத்திட்டம் சங்கம் (KTBS) இணைய தளத்தில் அப்லோடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திப்பு சுல்தான் பாடப்பகுதி நீக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஐந்தாவது சேப்டரில் திப்பு சுல்தான், அவரது தந்தை, வரலாற்று சிறப்புமிக்க மைசூர், அவரது நிர்வாகம் குறித்து இடம்பிடித்திருந்தது. தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.

பா.ஜனா ஆட்சிக்கு வந்த உடன் திப்பு சுல்தானின் பிறந்த விழாவை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News