search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திப்பு சுல்தான்"

    லண்டனில் மைசூரின் கடைசி திப்பு சுல்தானின் ஆயுதங்கள் ஏலத்தில் விடப்பட்டன. இதனை மக்கள் ஆர்வத்துடன் மிகுந்த விலை கொடுத்து வாங்கிச் சென்றனர். #TipuSultanarmoury #UKAution
    லண்டன்:

    திப்பு சுல்தான் 1750ம் ஆண்டு நவம்பர் 20ல் தேவனஹள்ளி பகுதியில் பிறந்தவர் ஆவார். இவர் மைசூரின் புலி எனவும் அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் மகனாவார். பிரிட்டிஷ் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த திப்பு, தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார்.

    திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தின்போது போர்களில் பயன்படுத்திய வாள், துப்பாக்கி போன்றவற்றை லண்டனில் உள்ள ஒரு நிறுவனம் ஏலம் விட்டது. இதில் திப்பு சுல்தானின் ஆயுதங்கள் மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பவுண்ட் (இந்திய மதிப்பில் 97 லட்சத்து 27 ஆயிரத்து 497 ரூபாய்) ஏலம் போனது. மேலும் வெள்ளி பூண் கொண்ட துப்பாக்கி, மற்றும் குறுவாள் ஆகியவை 60 ஆயிரம் பவுண்ட் (இந்திய மதிப்பில் 54 லட்சத்து 54 ஆயிரத்து 880 ரூபாய்) ஏலத்திற்கு விடப்பட்டது.



    இந்த துப்பாக்கிகள் மற்ற துப்பாக்கிகளை போல் இல்லாமல் மிகவும் அதிக சேதம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தங்கத்தினால் முலாம் பூசப்பட்ட வாள் காண்போரை கவரக்கூடிய வகையில் இருந்தது. இந்த வாள் 18500 பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் 16 லட்சத்து 82 ஆயிரத்து 519 ரூபாய்) ஏலம் போனது. #TipuSultanarmoury #UKAution  
    பெங்களூரில் உள்ள கர்நாடக ஹஜ் பவன் கட்டிடத்துக்கு திப்பு சுல்தான் பெயருக்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை வைக்க மாநில பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார். #HajBhavan
    பெங்களூர்:

    பெங்களூரில் உள்ள கர்நாடக ஹஜ் பவன் கட்டிடத்துக்கு திப்பு சுல்தான் பெயர் சூட்ட முடிவு செய்து இருப்பதாக கர்நாடக ஹஜ் மற்றும் வக்ப்போர்டு மந்திரி ஜமீர் அகமதுகான் சமீபத்தில் அறிவித்தார்.

    இதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஏற்கனவே சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது திப்புசுல்தான் பிறந்த நாளை மாநில அரசு விழாவாக கொண்டாடியது. இதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. மடிகேரியில் ஒருவர் கொல்லப்பட்டார்.

    தற்போது மந்திரி ஜமீரின் முடிவை ஏற்று ஹஜ் பவனுக்கு திப்புசுல்தான் பெயர் சூட்டினால் மாநில அளவில் பெரும் போராட்டம் நடத்துவோம் என்று மாநில பா.ஜனதா பொது செயலாளர் ஷோபா எச்சரித்துள்ளார்.

    முன்னாள் முதல்- மந்திரியும் மாநில பா.ஜனதா தலைவருமான எடியூரப்பாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் ஹஜ் பவனுக்கு திப்புசுல்தான் பெயர் சூட்டக் கூடாது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயர் சூட்டலாம் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி எடியூரப்பா கூறியதாவது:-


    ஹஜ் பவனுக்கு திப்பு பெயர் சூட்டுவதற்கு இப்போது என்ன அவசரம். மந்திரி ஜமீர் தேவையில்லாமல் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கப் பார்க்கிறார். ஹஜ் பவன் நான் முதல் மந்திரியாக இருந்த போது கட்டப்பட்டது. அந்த கட்டிடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரை சூட்டுவது தான் பொருத்தமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே காங்கிரசை சேர்ந்த துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறுகையில் ஹஜ் பவனுக்கு திப்பு சுல்தான் பெயர் வைப்பது தொடர்பாக அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றார்.#HajBhavan #AbdulKalam #APJAbdulKalam #BSYeddyurappa
    ×