செய்திகள்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்
கொரோனாவால் ஏற்பட்டுள்ள சூழலில் தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
புதுடெல்லி:
அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
அதில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் பீகாரில் சட்டமன்ற பொதுத்தேர்தலும், நாட்டின் பல தொகுதிகளில் இடைத்தேர்தல் வரவிருக்கிறது. தேர்தலையொட்டி வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பிரசாரம், பொதுக்கூட்டம் நடத்துவது குறித்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தேர்தல் ஆணையத்துக்கு ஜூலை 31-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
அதில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் பீகாரில் சட்டமன்ற பொதுத்தேர்தலும், நாட்டின் பல தொகுதிகளில் இடைத்தேர்தல் வரவிருக்கிறது. தேர்தலையொட்டி வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பிரசாரம், பொதுக்கூட்டம் நடத்துவது குறித்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தேர்தல் ஆணையத்துக்கு ஜூலை 31-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.