செய்திகள்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்து தயார் என தகவல் வைரல்
கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்யும் தடுப்பு மருந்து தயாராகி விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உலகில் முதல் நாடாக ரஷ்யா தடுப்பு மருந்து கண்டறிந்து இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.
வைரல் தகவல்களில் ரஷ்யாவின் மருத்துவ பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்யும் தடுப்பு மருந்தின் சோதனைகள் நிறைவுற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.
இந்த தகவலை ஆய்வு செய்ததில் ரஷ்யா கொரோனா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பு மருந்தின் முதற்கட்ட சோதனையை நிறைவு செய்து இருக்கிறது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த மருந்து அதிகளவு சோதனைகளை கடக்க வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா செய்தி நிறுவனம் முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றதை, முழு மருந்தும் பயன்படுத்த தயார் நிலையில் இருப்பதாக செய்தி வெளியிட்டதே வைரல் தகவல்களுக்கு காரணம் ஆகும். அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ரஷ்யா தடுப்பு மருந்தை கண்டறியவில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.