செய்திகள்
கொரோனாவைரஸ்சிகிச்சை பிரிவு கோப்புப்படம்

கொரோனாவைரஸ் பாதிப்பு 16 ஆம் நூற்றாண்டில் கணிக்கப்பட்டதாக வைரலாகும் பகீர் தகவல்

Published On 2020-07-06 03:53 GMT   |   Update On 2020-07-06 03:53 GMT
உலகில் கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பதை 16 ஆம் நூற்றாண்டிலேயே இவர்கள் கணித்துள்ளனர் என கூறும் பகீர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவுகளில். 16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்டர்டாமஸ் கொரோனா வைரஸ் பாதிப்பை கணித்ததாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய கணிப்பு நாஸ்டர்டாமஸ் எழுதிய லெஸ் பிராஃபெடிஸ் எனும் புத்தகத்தில் இடம்பெற்று இருப்பதாக வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.

வைரல் பதிவுகளில், இரட்டை (2020)ஆண்டில், ஒரு அரசி (கொரோனா) கிழக்கு பகுதியில் (சீனா) உதித்து, இருள்சூழ்ந்த நேரத்தில் ஏழு மலைகள் கொண்ட நாட்டில் (இத்தாலி) கிறுமிகளை பரப்பி, மக்களின் வைகறையை தூசியாக்கி, உலகில் பாதிப்பை ஏற்படுத்தும் என லெஸ் பிராஃபெடிஸ் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது.



வைரல் பதிவு விவரங்களை ஆய்வு செய்ததில், அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதை நிரூபிக்கும் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. மேலும் வைரல் தகவல்களில் உள்ளது போன்ற விவரம் எதுவும் அவர் எழுதிய லெஸ் பிராஃபெடிஸ் புத்தகத்தில் இல்லை என தெரியவந்துள்ளது.

உண்மையில் லெஸ் பிராஃபெடிஸ் குவாட்ரெயின் முறையில் எழுதப்பட்டுள்ளது. இவை நான்கு வரிகள் கொண்ட செய்யுள் வடிவம் ஆகும். எனினும், வைரல் தகவல்களில் இதற்கு மாறாக எழுதப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ளது போன்று, உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பை நாஸ்டர்டாமஸ் 16 ஆம் நூற்றாண்டில் கணிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News