செய்திகள்
கொரோனா நோயாளி

மகாராஷ்டிராவில் அடங்காத கொரோனா - 2 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை

Published On 2020-07-04 16:17 GMT   |   Update On 2020-07-04 16:17 GMT
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,074 பேருக்கு கொரோனா உறுதியானதால், அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது.
மும்பை:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஐந்தாவது கட்டமாக ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. இங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,074 பேருக்கு கொரோனா உறுதியானதால், அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது.

மகாராஷ்டிராவில் இன்று மேலும் 7 ஆயிரத்து 074 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 064 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 295 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8,671 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News