செய்திகள்
ரோந்து சென்ற சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- ஒரு வீரர் உள்பட 2 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் ரோந்து சென்ற சிஆர்பிஎப் வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் உள்பட 2 பேர் பலியாகினர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிக்கும் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒழிக்க ராணுவம், உள்ளூர் போலீஸ் இணைந்த கூட்டுப்படை தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், சோபூரின் மாடல் டவுன் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் இன்று ரோந்து சென்றபோது அவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிஆர்பிஎப் வீரர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என இரண்டு பேர் உயிரிழந்தனர். 3 சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர்.