செய்திகள்
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள்

இந்தியாவில் 5.48 லட்சம் பேருக்கு கொரோனா- 3.21 லட்சம் நபர்கள் குணமடைந்தனர்

Published On 2020-06-29 04:06 GMT   |   Update On 2020-06-29 04:06 GMT
இந்தியாவில் 5.48 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 58.6 சதவீத நோயாளிகள் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களாக தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்திலேயே உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 548318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 19459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 380 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16475 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 3 சதவீதமாக உள்ளது.

இதுவரை 321723 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 12010 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 58.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 210120 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 164626 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 82275 பேருக்கும், டெல்லியில் 83077 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News