செய்திகள்
கேரளாவில் மேலும் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்று மேலும் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் இன்று மேலும் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 133 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. தற்போது கேரளத்தில் 1,490 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1659 ஆக உள்ளது என தெரிவித்துள்ளார்.