செய்திகள்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Published On 2020-06-10 12:04 GMT   |   Update On 2020-06-10 12:04 GMT
2020-21 நிதியாண்டின் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,157 கோடி விடுக்கப்பட்டுள்ளது. அதில் 2020-21 நிதியாண்டின் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிதியானது, கொரோனா நெருக்கடி சூழலில் கூடுதல் நிதி ஆதாரமாக பயனளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்  தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். 


Tags:    

Similar News