செய்திகள்
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் இதுவரை 43.86 லட்சம் மாதிரிகள் பரிசோதனை- ஐசிஎம்ஆர் தகவல்

Published On 2020-06-05 06:02 GMT   |   Update On 2020-06-05 06:02 GMT
கடந்த 24 மணி நேரத்தில் 1,43,661 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் இதுவரை 226770 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6348 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 109462 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 48.27 சதவீதமாக உள்ளது.

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதுவரை மொத்தம் 43,86,376 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,43,661  மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News