செய்திகள்
ஊரடங்கை அமல்படுத்தியதில் சண்டிகாருக்கு முதலிடம்
சண்டிகர், டெல்லி ஆகிய 2 யூனியன் பிரதேசங்களும் மிகச்சிறப்பாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடித்ததாக தெரிய வந்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதுவரை மத்திய அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகளை எந்தெந்த மாநிலங்கள் சிறப்பாக மேற்கொண்டன என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் சண்டிகர், டெல்லி ஆகிய 2 யூனியன் பிரதேசங்களும் மிகச்சிறப்பாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடித்ததாக தெரிய வந்துள்ளது.
டெல்லி, மராட்டியம், பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் ஊரடங்கு சிறப்பாக கடைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கேரளா, திரிபுரா, இமாச்சல பிரதேசம், ஆந்திரா, அசாம், ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமாரான அளவுக்கு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஊரடங்கை கண்டுகொள்ளாத மாநிலங்களில் பீகார் மிக மிக மோசமாக இருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மராட்டியம், பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் ஊரடங்கு சிறப்பாக கடைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கேரளா, திரிபுரா, இமாச்சல பிரதேசம், ஆந்திரா, அசாம், ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமாரான அளவுக்கு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஊரடங்கை கண்டுகொள்ளாத மாநிலங்களில் பீகார் மிக மிக மோசமாக இருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.