search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandigarh"

    • சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது உச்சபட்ச அதிகாரமான பிரிவு 142-யை பயன்படுத்தியுள்ளது.
    • தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அதிகாரத்தை பயன்படுத்துவதாக தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது உச்சபட்ச அதிகாரமான பிரிவு 142-யை பயன்படுத்தியுள்ளது. மிகவும் அவசியப்படுகிறது என்றால் மட்டும்தான் இதை உச்சநீதிமன்றம் பயன்படுத்தும். தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அதிகாரத்தை பயன்படுத்துவதாக தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    சண்டிகர் மேயர் தேர்தலில், தேர்தல் நடத்திய அதிகாரி பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார் என அறிவித்த நிலையில் அதை இன்று உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளருக்கு தேவையான இடங்களுக்கு பாதிக்குக் கீழ்தான் இருந்துள்ளது ஆனாலும் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளருக்கு பதிவான 8 வாக்குச் சீட்டுகளை எடுத்து வேண்டுமென்றே தேர்தல் நடத்தி அதிகாரி சுயநினைவுடன் சிதைத்துள்ளார் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரி எவ்வளவு வெளிப்படையாக ஒரு தவற்றைச் செய்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அப்பட்டமான பொய்யையும் கூறிவிட்டு மிக தைரியமாக இருக்கிறார் என்றால் இது யார் கொடுக்கும் தைரியம் என்ற கேள்வி எழாமல் இல்லை? எனவும் உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

    சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டு பாஜக வேட்பாளரை முறைகேடாக வெற்றி பெற்றார் என அறிவித்த தேர்தல் நடத்திய அதிகாரிக்கு எதிரான நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

    மேலும், நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்ததற்காக தேர்தல் அதிகாரி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் சந்திக்க வேண்டுமென உத்தரவு.

    • ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்

    சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

    சண்டிகரில் புதிதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. அனைத்து வாக்குச்சீட்டுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதற்கு முன்பே (பிப் 18) பாஜகவை சேர்ந்த சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென தனது ராஜினாமா செய்தார். அதே சமயம் ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்.

    சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில், விசாரணைக்கு ஆஜரான தேர்தல் நடத்தும் அதிகாரி 8 வாக்குச்சீட்டுகளில் x என குறியிட்டதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி நேற்று(பிப் 19) உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

    சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில், விசாரணைக்கு ஆஜரான தேர்தல் நடத்தும் அதிகாரி 8 வாக்குச்சீட்டுகளில் x என குறியிட்டதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், நேற்றே (பிப் 18) சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென ராஜினாமா செய்தார். அதே சமயம் ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், "சண்டிகரில் நடைபெறும் குதிரைப்பேரம் குறித்தும் நாங்கள் கவலைப்படுகிறோம்" என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சண்டிகரில் புதியதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. நாளை அனைத்து வாக்குச்சீட்டுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேயர் தேர்தலில் பதிவான வாக்குகள் ,மீண்டும் எண்ணப்பட்டு அதன் அடிப்படையில் மேயர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    • தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்பதை சண்டிகர் மேயரின் ராஜினாமா நமக்கு உறுதிப்படுத்துகிறது.
    • பாஜக தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், எங்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்

    மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ள நிலையில் சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்பதை சண்டிகர் மேயரின் ராஜினாமா நமக்கு உறுதிப்படுத்துகிறது. பாஜக தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், எங்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜனவரி 30-ம் தேதி நடைபெற்றது.

    இதில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்த்துக் களமிறங்கின. ஆம் ஆத்மி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் மற்ற இரண்டு பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது.

    சண்டிகர் மேயர் தேர்தலில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

    இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.இதற்கு, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ மாற்றம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலை நடத்தினார்.
    • துணை ராணுவப்படைகளுடன் சுமார் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    சண்டிகரில் மேயர் தேர்தல் இன்று காலையில் நடந்தது. 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில் பாஜகவுக்கு 14 கவுன்சிலர்களும், ஆம்ஆத்மிக்கு 13 கவுன்சிலர்களும், காங்கிரசுக்கு 7 கவுன்சிலர்களும், சிரோன்மணி அகாலி தளத்திற்கு ஒரு கவுன்சிலரும் உள்ளனர்.

    மேயர் பதவிக்கு குமாரை ஆம் ஆத்மி கட்சி முன் நிறுத்தியது. பாஜக மனோஜ் சோங்கரை வேட்பாளராக நிறுத்தியது. மூத்த துணை மேயர் பதவிக்கு, காங்கிரஸின் குர்பிரீத் சிங் காபியை எதிர்த்து பாஜகவின் குல்ஜீத் சந்து போட்டியிட்டார்.

    துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பாஜக சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார். 

    இந்நிலையில் மேயர், மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பாஜக மோதியது. தலைமை அதிகாரி அனில்மசிஹ், மேயர் பதவிக்கான வாக்கெடுப்பு பணியை தொடங்கினார்.

    சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷனின் முன்னாள் அலுவல் உறுப்பினராக வாக்குரிமை பெற்ற சண்டிகர் எம்.பி கிரோன்கெர் முதலில் வாக்களித்தார். அவர் காலை 11.15 மணிக்கு வாக்களித்தார்.

    இந்த மேயர் தேர்தலில் பாஜக மேயர் வேட்பாளர் மனோஜ்சோங்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் சிங் 12 வாக்குகள் பெற்றனர். 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

    இதில், மேயர் பதவியை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மனோஜ் சோங்கர் வென்றார். ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் குல்தீப் குமாரை அவர் எளிதில் தோற்கடித்தார்.

    அதை தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலை நடத்தினார். 

    வாக்கெடுப்பு பணியின்போது, வீடியோ பதிவு செய்யப்பட்டது. வாக்குப்பதிவு தொடங்கும் முன், மாநகராட்சி இணை ஆணையர், பின்பற்ற வேண்டிய செயல்முறை மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

    மேயர் தேர்தலையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. துணை ராணுவப்படைகளுடன் சுமார் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    மேயர் தேர்தல் முதலில் ஜனவரி 18- ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தேர்தல் அதிகாரிக்கு உடல்நிலை சரியில்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இன்று நடந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 8 ஆண்டுகளாக மேயர் பதவியை வகித்து வரும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டதால் இது முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது.

    • காவி, வெள்ளை, பச்சை மற்றும் கருநீலம் என ஆடைகளை அணிந்து இருந்தனர்.
    • மூவர்ணக் கொடி வடிவத்தில் நின்று கின்னஸ் சாதனை படைத்தனர்.
    அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தலைநகராக உள்ள சண்டிகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. #helmet
    புதுடெல்லி:

    பிறநாடுகளின் காலனி பகுதிகளாக  நமது நாட்டில் உள்ள டெல்லி, கோவா, புதுச்சேரி, அந்தமான் - நிக்கோபர் தீவுகள் மற்றும் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தலைநகராக உள்ள சண்டிகர் நகரம் உள்ளிட்ட பகுதிகள் யூனியன் பிரதேசம் என்றழைக்கப்படுகின்றன.

    மத்திய அரசின் நேரடி ஆளுமைக்கு உட்பட்ட இப்பகுதிகளுக்கென சில சிறப்பு அதிகாரங்களும், சட்டங்களும், சலுகைகளும் உள்ளன. அவ்வகையில், டெல்லிக்குட்பட்ட பகுதிகளுக்கான மோட்டார் வாகன சட்டத்தில் கடந்த 1999-ம் ஆண்டில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

    இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் பெண்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயமல்ல, விருப்பப்பட்டால் பாதுகாப்பு கருதி அவர்களின் தேர்வுக்கேற்ப ஹெல்மெட் அணிந்து செல்லலாம் என 1993-ம் ஆண்டில் இயற்றப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் துணை விதி 115-ல் திருத்தம் செய்யப்பட்டது.

    பின்னர்,கடந்த 28-8-2014 அன்று இதே விதியில் மீண்டும் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. ‘பெண்கள்’ என்று இருந்த சொல் ‘சீக்கிய பெண்கள்’ என்று மாற்றப்பட்டு, இந்த திருத்தமும் ஒப்புதல் பெறப்பட்டது.



    இதன்படி, நாட்டின் தலைநகரான டெல்லியில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் சீக்கிய பெண்கள் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயமல்ல, பாதுகாப்பு கருதி அவர்களின் தேர்வுக்கேற்ப விருப்பப்பட்டால் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், யூனியன் பிரதேசம் ஆளுமைக்கு உட்பட்ட சண்டிகர் நகருக்கும் இந்த விதி பொருந்தும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் தீர்மானித்தது. இதுதொடர்பான அறிவிப்பு சண்டிகர் நகர நிர்வாகத்துக்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் டெல்லியில் உள்ளதுபோல் இனி சண்டிகர் நகரிலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

    இருசக்கர வாகனங்களை ஓட்டும், பின்னால் அமர்ந்து செல்லும் சீக்கிய ஆண்களுக்கு ஹெல்மெட் கட்டாயமல்ல என்னும் நடைமுறை ஏற்கனவே நாடு முழுவதும் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    இரண்டு மாதங்களாக ஜீவனாம்சம் வழங்காத நிலையில் முன்னாள் மனைவி கோர்ட்டை நாடிய நிலையில், 24600 ரூபாயை முன்னாள் கனவர் சில்லரைகளாக வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
    சண்டிகர்:

    அரியானா ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றுபவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். மனைவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

    இரு மாதங்களாக ஜீவனாம்சம் வழங்காததால் அந்த பெண் கோர்ட்டை நாட,  2 மாதத்துக்கான ஜீவனாம்சத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மாவட்ட கோர்ட் உத்தரவிட்டது. 

    இதையடுத்து அந்த வக்கீல் ரூ.24,600 ரூபாயை சில்லரையாகவும், மீதமுள்ள 400 ரூபாயை நூறு ரூபாய் நோட்டாகவும் மூட்டையில் கட்டி நீதிமன்றத்துக்கு வந்து மனைவியிடம் வழங்கினார். அதை ஏற்க அவரது மனைவி மறுத்து விட்டார். தனக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நிலையில் இப்படி சில்லரையாக தருவதும் ஒரு வகையில் கொடுமைதான், சில்லரையை வங்கியில் வாங்க மறுக்கிறார்கள் என முறையிட்டார்.

    ‘ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்பது தான் உத்தரவு. நோட்டாகதான் கொடுக்க வேண்டும் என்பது உத்தரவல்ல’ என வக்கீல் சட்டம் பேச வாக்குவாதம் வெடித்துள்ளது. பின்னர் ,அந்த வழக்கறிஞர் சில்லரைகளை எனது ஜூனியர்களை விட்டு எண்ணித் தரச்சொல்கிறேன் என்றும் அதை ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாகவும் உறுதியளித்தார். இதனை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    சண்டிகர் மாவட்டத்தில் வேலை தேடி சென்ற 22 வயது இளம்பெண்ணை 40 பேர் கற்பழித்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. #Chandigarh
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் பஞ்சகுலா பகுதியில் தனது கணவருடன் வசிக்கும் 22 வயது பெண், கணவரின் நண்பர் வேலை வாங்கி தருவதாக அளித்த வாக்குறுதியை நம்பி, சண்டிகரில் உள்ள மோர்னி மலைப்பகுதிக்கு சென்றுள்ளார்.

    அங்கு அவர் ஒரு சொகுசு பங்களாவில் அடைத்து வைக்கப்பட்டு, 40 கொடூரர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளார். சுமார் 4 நாட்கள் அவர் அந்த இடத்தில் அடைத்து வைத்து பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சொகுசு வீட்டில் பணிபுரியும் 2 பேரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Chandigarh
    ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் சண்டிகாரை சேர்ந்த பிரணவ் கோயல் என்ற மாணவர் 360-க்கு 337 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்தார். #JEEResult #PranavGoyal #Topper
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி.களில் (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) மாணவர் சேர்க்கைக்காக தேசிய அளவில் ‘ஜே.இ.இ. அட்வான்ஸ்டு’ என்னும் மேம்பட்ட கூட்டு நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 20-ந் தேதி நடைபெற்றது. முதல் முதலாக ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த தேர்வை 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

    இதில் சண்டிகாரை சேர்ந்த பிரணவ் கோயல் என்ற மாணவர் 360-க்கு 337 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்தார். ராஜஸ்தானை சேர்ந்த மீனாள் பராக் என்ற மாணவி 318 மதிப்பெண்கள் எடுத்து மாணவிகளில் முதல் இடம் பெற்றார்.

    மாணவர்கள் இந்த தேர்வு முடிவினை அதிகாரபூர்வ இணையதளமான jeeadv.ac.in -ல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். செல்போனில் பதிவு செய்தவர்கள், தேர்வு முடிவை குறுந்தகவல் மூலம் அறியலாம். வரும் 15-ந் தேதி முதல் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 11 ஆயிரத்து 279 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 18 ஆயிரத்து 138 பேர் தகுதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    ×