செய்திகள்
கேரளாவில் புதிதாக 49 பேருக்கு கொரோனா
கேரளாவில் நேற்று புதிதாக 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நேற்று புதிதாக 49 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
வைரஸ் உறுதி செய்யப்பட்ட 49 பேரில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மேலும், 25 பேர் வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வந்தவர்கள். எஞ்சிய 6 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 896 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 359 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.