செய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்த சரியான தகவலும், சிகிச்சையும் முக்கியம்: பிரியங்கா காந்தி
கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமானால் சரியான தகவலிலும், சரியான சிகிச்சையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி :
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ‘ஆக்ராவை காப்பாற்றுங்கள்’ என்று அந்நகர மேயர் நவீன் ஜெயின், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா எழுதிய ‘டுவிட்டர்’ பதிவு வருமாறு:-
நானும் இந்த பிரச்சினையை ஏற்கனவே எழுப்பினேன். வெளிப்படைத்தன்மை மிக முக்கியம். பரிசோதனையில் அக்கறை செலுத்த வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமானால் சரியான தகவலிலும், சரியான சிகிச்சையிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ‘ஆக்ராவை காப்பாற்றுங்கள்’ என்று அந்நகர மேயர் நவீன் ஜெயின், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா எழுதிய ‘டுவிட்டர்’ பதிவு வருமாறு:-
நானும் இந்த பிரச்சினையை ஏற்கனவே எழுப்பினேன். வெளிப்படைத்தன்மை மிக முக்கியம். பரிசோதனையில் அக்கறை செலுத்த வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமானால் சரியான தகவலிலும், சரியான சிகிச்சையிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.