செய்திகள்
கொரோனா வைரஸ்

மகாராஷ்டிராவில் 96 போலீசாருக்கு கொரோனா

Published On 2020-04-25 14:45 GMT   |   Update On 2020-04-25 14:45 GMT
மகாராஷ்டிராவில் 96 போலீசார் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர் என அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
மும்பை:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் 96 போலீசார் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களில் 7 பேர் குணமடைந்துள்ளனர் என அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News