செய்திகள்
சோனியா காந்தி

கொரோனா தடுப்பு நடவடிக்கை - மாநில தலைவர்களுடன் சோனியா காந்தி 11-ம் தேதி கலந்துரையாடுகிறார்

Published On 2020-04-08 09:42 GMT   |   Update On 2020-04-08 09:42 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில தலைவர்களுடன் காங். கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி 11-ம் தேதி வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடுகிறார்.
புதுடெல்லி:

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து,  அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு  உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கள் தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு துறை வல்லுநர்களுடன் வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடி வருகிறார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வரும் 11-ம் தேதி வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடுகிறார். அப்போது காங்கிரஸ் சார்பில் எடுக்கப்பட வேண்டிய நிவாரண பணிகள் குறித்து விவாதிக்கலாம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News