செய்திகள்
பிரதமர் மோடி

நாளை காலை 9 மணிக்கு மக்களிடம் பேசுகிறார் பிரதமர் மோடி

Published On 2020-04-02 12:29 GMT   |   Update On 2020-04-02 12:29 GMT
நாளை காலை 9 மணிக்கு வீடியோ மூலம் மக்களுக்கு தகவல்களை பகிரவுள்ளதாக பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.
புதுடெல்லி:

உலகை அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மக்கள் ஊரடங்கை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.  இதையொட்டி  நாடு முழுவதும் 21 நாள்  ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது வருகிறது.

கொரோனாவுக்கு எதிராக அரசுகளின் போராட்டம் ஒருபுறம் தீவிரமாக இருக்க மறுபுறம் மக்கள் விதிமுறைகளை மீறி வருகிறார்கள். இது மத்திய, மாநில அரசுகளுக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாளை காலை 9 மணிக்கு வீடியோ மூலம் மக்களுக்கு தகவல்களை பகிரவுள்ளதாக பிரதமர் மோடி மீண்டும் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News